Latest Updates
-
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்..
தாங்க முடியாத வலிகளால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்
சிலருக்கு தாங்க முடியாத தலைவலி சிறு வயதிலிருந்தே இருக்கும். சிலர் கால் வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி என எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
பரிசோதனையிலும் ஒன்றுமில்லை என மருத்துவர்கள் சொல்லியிருப்பார்கள்.ஆனாலும் இவை வாழ் நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இது போன்ற நாள்பட்ட வலிகளுக்கு என்னதான் காரணம்? மரபணு.

நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கோ இந்த மாதிரியான வலி இருந்தால்,அது அடுத்த சந்ததியினருக்கும் தொடரும் என ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. இந்த மாதிரியான நாள்பட்ட வலிகளை ஏற்படுத்தும் மரபணு, பெற்றோரிடமிருந்து அடுத்த சந்ததியினருக்கு கடத்திச் செல்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த இரு பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. வலிகள் எதனால் ஏற்படுகிறது. நாள்பட்ட வலிகளுக்கு காரணமென்ன என ஆய்வு செய்தத்தில் இது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலுல்ள வாண்டர் பில்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அமெண்டா ஸ்டோன் என்ற ஆராய்ச்சியாளர் மற்றும் ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னா வில்சன் ஆகிய இருவரும் இந்த ஆய்வை நடத்தினர்.
அப்பாவோ அல்லது அம்மாவோ நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இது கரு உற்பத்தியாகும்போது, அதனையும் சேர்த்து பாதிப்பதால் இந்த மாதிரியான வலிகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
போதிய உடற்பயிற்சிகள் இல்லாதிருப்பது மற்றும் மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்க்கை நடத்தும் பெற்றோர்கள் தங்களின் வலிகளை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இந்த மாதிரியான வலிகளைக் கொண்ட பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான செயலமைப்பு மரபணுவில் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

