Just In
- 30 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தாங்க முடியாத வலிகளால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்
சிலருக்கு தாங்க முடியாத தலைவலி சிறு வயதிலிருந்தே இருக்கும். சிலர் கால் வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி என எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
பரிசோதனையிலும் ஒன்றுமில்லை என மருத்துவர்கள் சொல்லியிருப்பார்கள்.ஆனாலும் இவை வாழ் நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இது போன்ற நாள்பட்ட வலிகளுக்கு என்னதான் காரணம்? மரபணு.
நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கோ இந்த மாதிரியான வலி இருந்தால்,அது அடுத்த சந்ததியினருக்கும் தொடரும் என ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. இந்த மாதிரியான நாள்பட்ட வலிகளை ஏற்படுத்தும் மரபணு, பெற்றோரிடமிருந்து அடுத்த சந்ததியினருக்கு கடத்திச் செல்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த இரு பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. வலிகள் எதனால் ஏற்படுகிறது. நாள்பட்ட வலிகளுக்கு காரணமென்ன என ஆய்வு செய்தத்தில் இது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலுல்ள வாண்டர் பில்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அமெண்டா ஸ்டோன் என்ற ஆராய்ச்சியாளர் மற்றும் ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னா வில்சன் ஆகிய இருவரும் இந்த ஆய்வை நடத்தினர்.
அப்பாவோ அல்லது அம்மாவோ நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இது கரு உற்பத்தியாகும்போது, அதனையும் சேர்த்து பாதிப்பதால் இந்த மாதிரியான வலிகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
போதிய உடற்பயிற்சிகள் இல்லாதிருப்பது மற்றும் மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்க்கை நடத்தும் பெற்றோர்கள் தங்களின் வலிகளை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இந்த மாதிரியான வலிகளைக் கொண்ட பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான செயலமைப்பு மரபணுவில் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.