Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
மனப்பதட்டம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் என ஆய்வு
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில், ஒரு ஆராய்ச்சி நடந்தது. இதில் 35 வயதிற்குட்பட்ட பெண்களே, ஆண்களை விட மனப்பதட்டத்திற்கு ஆளாகிறார்கள் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆராய்ச்சி வளர்ந்த நாடுகளில் கணக்கெடுக்கப்பட்டது. ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த ஆய்வில் உள்ளடக்கம்.
பொதுவாக 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மிகுந்த பதட்டமான சூழ் நிலைகளுக்கு தள்ளப்படுவதாகவும், மன அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்ட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

அதேபோல், உடல் குறைபாடு, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரு மடங்கு மனப்பதட்டம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக இதய நோய் உள்ளவர்களில் பத்தில் ஒருவருக்கு மனப் பதட்டம் இருப்பதாகவும், அதுவும் பெண்களின் சதவீதமே அதிகமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு மனப்பதட்டம் இருப்பதாக கூறுகின்றனர்.
மனப்பதட்டம் நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். இதனால் நிறைய தீவிரமான பிரச்சனைகளை கொண்டு சேர்க்கும். ஆகவே இவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆய்வாளர் ஒலிவியா ரேம்ஸ் கூறுகின்றார்.
இந்த எல்லா ஆய்வுகளையும் சேர்த்து பார்த்ததில் நோய்களால் பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு , ஏற்படும் மனப்பதட்டம், அவர்களுக்கு இன்னும் வாழ்க்கையில் பாரத்தைதான் தரும். வாழ்நாட்களின் எண்ணிக்கையை குறைக்கச் செய்யும் என்று கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து, தெருவோரம் இருக்கும் இளைஞர்கள், செக்ஸ் தொழிலாளர்கள் என இந்த ஆய்வு எல்லா விதமான மக்களையும் ஆய்வு செய்ததாக தெரிகிறது.
இதில் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் தவிர்த்து, ஓரின சேர்க்கையாளர்கள், திரு நங்கைகள், செக்ஸ் தொழிலாளர்கள், ஆகியோர்களுக்கும் மனப் பதட்டம் அதிகமாகி வரும் சூழ் நிலை உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














