Latest Updates
-
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது.. -
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...! -
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்.. -
புதிய பாபா வாங்கா கணிப்பின் படி அமெரிக்கா-ஈரான் போருக்கு பின் அமெரிக்காவின் நிலை என்னவாகும் தெரியுமா? -
IPL 2026: இந்த ஆண்டின் சிஎஸ்கே அணியில் உள்ள மிகச்சிறந்த 5 வீரர்கள்! இவர்களால் ஆட்டமே அதிரடியா இருக்கப்போகுது! -
அலட்சியமாக இருக்குறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் அடிச்சிக்கவே முடியாதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: மார்ச் 26 முதல் இந்த 6 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
இரவு மிகவும் தாமதமாக உணவு உட்கொள்வதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்!!!
உணவு உட்கொள்வது என்பது கூட ஓர் இலக்கணம் போல தான். அதைத் தவறி செய்யும் போது, நமது உடலில் பல விஷயங்கள் தவறாக நடக்கிறது. எப்படி உங்கள் பைக், கார்களை சரியான நேரத்திற்கு சர்வீஸ் செய்ய வேண்டுமோ. அதே போல உங்களது வயிற்றுக்கும் சரியான நேரத்தில் உணவளிக்க வேண்டும்.
உண்ணா நோம்பு இருப்பதற்குக் காரணம் கடவுள் நம்பிக்கை அல்ல, அது உங்கள் உடல் பாகத்திற்கு சிறிய இடைவேளை போன்றது. சிலர், உண்ணா நோம்பு இருக்கும் போது பால், பழங்கள் மட்டும் சாப்பிடுவார், சிலர் இது தான் விரதமா? என்று நக்கலாக கூறுவார்கள்.
ஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் உடல் இயக்கத்தை சீராக பராமரிக்க இலகுவான உணவுகள் மட்டும் சாப்பிட்டு, உடல் பாகங்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் உங்கள் உடல்நலமும், ஆரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும்.
இனி, இரவு வேளைகளில் தாமதமாக உணவு சாப்பிடுவதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் பற்றிப் பார்க்கலாம்...

உறக்கம் கெடும்
சிலர் நாள் முழுதும் சாப்பிடக் கூட நேரம் ஒதுக்காமல் வேலை செய்துவிட்டு, நள்ளிரவு கடும் பசி என்று நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால், உங்கள் வயிறு உப்புசம் அடைந்து உறக்கம் தான் கெடும். இரவு நேரங்களில் பொதுவாகவே கடின உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

உடல் பருமன்
இரவு மிகவும் தாமதமாக உணவு உட்கொள்வதால், உங்கள் உடல் பருமன் தான் அதிகரிக்கும். நாம் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவு கலோரிகள் கரைய வேலை செய்தல் அவசியம். ஆனால், நாம் இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு குப்புறப்படுத்து தூங்கிவிடுவோம். இதனால், உடல் எடை தான் அதிகரிக்கும்.

நெஞ்செரிச்சல்
இரவு தாமதமாக சாப்பிடும் போதுக் கடினமான, காரமான, வாயு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

அமில எதிர்விளைவுகளில்
எப்போதும் நாம் சாப்பிட்ட உடனேயே தூங்குவது தவறான அணுகுமுறை ஆகும். சாப்பிட்ட பிறகு சிறிது நேரமாவது வேறு வேலைகள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில் செரிமானம் ஆகும் போது ஏற்படும் அமில எதிர்விளைவுகள் காரணமாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இரவு தாமதமாக சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

செரிமானக் கோளாறுகள்
சிலருக்கு காலை வேளையில், காலைக்கடன் கழிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவதும் கூட அதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. எனவே, முடிந்த வரை இரவு வேளைகளில் தாமதமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால் பழங்கள், பால் போன்ற எளிய உணவுகளை உட்கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications











