Just In
- 38 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? அப்ப இஞ்சியை உணவில் அதிகம் சேத்துக்கோங்க...
நீங்கள் ஒவ்வொரு நாளும் சோர்வை உணர்கிறீர்களா? அந்த சோர்வைப் போக்குவதற்கு தினமும் ஏராளமான காபியைக் குடிக்கிறீர்களா? முதலில் சோர்வைப் போக்க காபி குடிப்பதை நிறுத்துங்கள். காபியை அதிகமாக குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஆனால் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த இஞ்சியை உண்ணும் உணவில் அதிகம் சேர்த்தால், சோர்வு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் இஞ்சி உணவிற்கு நல்ல மணத்தையும் தரும். சரி, இப்போது இஞ்சி எப்படி சோர்வைப் போக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது என்று பார்ப்போம்.
உடலினுள் உள்ள காயங்கள்
இஞ்சியில் உள்ள ஜிங்ஜெரால் என்னும் கலவை மிகவும் சக்தி வாய்ந்த ஓர் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள். இது நாள்பட்ட சோர்வை ஏற்படுத்தும் பிரச்சனைகளான இதய நோய் அல்லது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
பாக்டீரியா தொற்றுக்களைக் குறைக்கும்
உடலில் சோர்வு ஏற்படுவதற்கு தொற்றுக்களும் ஓர் காரணம். இந்த தொற்றுக்களைத் தடுக்க இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக இஞ்சி சிறந்த நேச்சுரல் ஆன்டி-பயாடிக் என்பதால், பாக்டீரியாக்களால் ஏற்பட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். எனவே உடலினுள் உள்ள தொற்றுக்களை அழிக்க, வாரம் 2-3 முறையாவது இஞ்சியை சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வாருங்கள்.
வைரஸ் தொற்றுகள் நீங்கும்
குளிர் அல்லது மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்வற்றால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாவோம். இவைகள் ஒருமுறை உடலைத் தாக்கினால் உடலில் உள்ள ஆற்றல் முழுமையாக போய்விடும். மேலும் சாதாரண நிலைக்குத் திரும்ப 1 வாரம் ஆகும். ஆனால் இப்பிரச்சனைகள் இருக்கும் போது ஆன்டி-வைரல் தன்மை அதிகம் நிறைந்த இஞ்சி சாற்றினைக் குடித்து வந்தால், சளி, இருமலுக்கு காரணமான வைரஸ்கள் அழிக்கப்பட்டு, விரைவில் உடல் குணமாவதோடு, சுறுசுறுப்புடனும் இருக்கும்.
இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படும்
உடலில் மிகுந்த சோர்வை உணர்வதற்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் காரணம். இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க வேண்டுமெனில், இஞ்சியை சாறு எடுத்து குடியுங்கள். இதனால் இரத்த சர்க்கரையின் ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு, அதனால் ஏற்படும் சோர்வு நீங்கும்.
மாதவிடாய் வலி
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வலியுடன், மிகுந்த சோர்வும் இருக்கும். இதனை இஞ்சியில் உள்ள குர்குமின் சரிசெய்யும். மேலும் ஆய்வுகளில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இஞ்சியை ஒரு கிராம் அளவில் எடுத்து வந்தால், இப்பிரச்சனைகள் நீங்குவதாக தொரிய வந்துள்ளது.
மனநிலை புத்துணர்ச்சியடையும்
இஞ்சி உடல் அழுப்பைப் போக்க மட்டுமின்றி, மனநிலையை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவும். எனவே உங்களுக்கு மனநிலை சரியில்லையென்றால், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் மனநிலை மேம்பட்டு, சுறுசுறுப்போடு இருப்பதை உணர்வீர்கள்.
நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
இஞ்சியில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதோடு, இது நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் சிறந்த பொருளும் கூட. இதன் மூலம் இஞ்சியைக் கொண்டு எப்பேற்பட்ட நோய்களையும் எதிர்த்துப் போராட முடியும். மேலும் இஞ்சியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இதனால் முதுமைத் தோற்றமும் தள்ளிப் போடப்படும்.