Latest Updates
-
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்!
மூக்கு ஒழுகல் தொல்லை தாங்க முடியலையா? இதோ சில எளிய நிவாரணிகள்!
கோடையில் வெயில் அதிகம் கொளுத்தும் என்று பார்த்தால், மழை பொழிந்து வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல இதமான சூழ்நிலையைத் தருகிறது. அதே சமயம் திடீர் காலநிலை மாற்றத்தினால் சிலருக்கு இருமல், தொடர்ச்சியான தும்மல், மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகள் வரும்.
குறிப்பாக மூக்கு ஒழுகல் பிரச்சனை வந்தால் தான் நிம்மதி பறிபோகும். ஏனெனில் இந்த பிரச்சனையால் எந்த ஒரு வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது. எப்போதும் மூக்கில் துணியை வைத்து துடைத்தவாறே இருக்க வேண்டியிருக்கும்.
எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில உடனடி நிவாரணிகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, மூக்கு ஒழுகலில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

ஆவிப்பிடிப்பது
அளவுக்கு அதிகமான சளி சேரும் போது, மூக்கு ஒழுகல் மற்றும் தொடர்ச்சியான தும்மல் ஏற்படும். இதற்கு உடனடி நிவாரணியாக விளங்குவது ஆவி பிடிப்பது தான். அதிலும் கொதிக்கும் நீரில், சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, போர்வையினுள் அமர்ந்து ஆவி பிடித்து வந்தால், சளி அனைத்தும் வெளியேறி உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயை லேசாக சூடேற்றி, மிதமான சூட்டில் உள்ள அந்த எண்ணெயின் 2-3 துளிகளை மூக்கினுள் விட்டால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், தும்மல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் இந்த செயலை தினமும் 2-3 முறை செய்து வருவது நல்லது. இல்லாவிட்டால், கொதிக்கும் நீரில் சிறிது கடுகு எண்ணெய் மற்றும் சீரகம் சேர்த்து, அந்த நீரில் இருந்து வெளிவரும் ஆவியை நுகர வேண்டும். இப்படி செய்து வந்தாலும் மூக்கு ஒழுகல் நின்றுவிடும்.

மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை நீரில் கலந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் 2 முறை குடித்து வந்தால், சளி தளர்ந்து வெளிவந்துவிடும். இல்லையெனில் இரவில் படுக்கும் போது வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சளி, இருமல், மூக்கு ஒழுகல், தொண்டைப்புண் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கும். முக்கியமாக அத்துடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி
சிறிது இஞ்சியை உப்பில் தொட்டு வாயில் போட்டு மென்றால் அல்லது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடித்தால், மூக்கு ஒழுகல் நின்றுவிடும்

பூண்டு
பச்சை பூண்டை வாயில் போட்டு மென்று வந்தால், மூக்கு ஒழுகல் நின்று விடும். மேலும் இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், மூக்கு ஒழுகல் பிரச்சனையே இருக்காது.

தேன்
தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து இரு வேளை குடித்து வந்தால் அல்லது எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடித்து வந்தால், மூக்கு ஒழுகல் நிற்கும்.

துளசி
வீட்டில் துளசி செடி இருந்தால், அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் மற்றும் இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதன் மூலம் சளி, இருமல், மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications