Latest Updates
-
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்!
நான் மதுவிற்கு அடிமையாகி விட்டேனா...?
சாதாரணமாக மது குடிக்கத் தொடங்கி, தினமும் அதை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும் நேரங்களில் பலரும் நினைக்கும் விஷயம் தான் மேற்கண்ட தலைப்பு! அந்த நாட்கள் மிகவும் சோர்வான நாட்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுதெல்லாம் இது போன்ற மனச் சோர்வுமிக்க சூழல்களை பணியாளர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் எப்படி கையாளுகிறார்கள் என்ற விஷயம் மிகவும் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
சில அலுவலக பணியாளர்கள் குடித்து கும்மாளமிடும் பஃப்களுக்கு சென்று தங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க முயல்கிறார்கள். இதன் மூலம் வெள்ளிக்கிழமை இரவுகள் எல்லாம் குடிமயமான இரவுகளாக மெதுவாக மாறத் தொடங்குகின்றன. இதுவே வார நாட்களில் பீர் பாட்டில்களை கையில் ஏந்த ஒரு தொடக்கமாகவும் உள்ளது. என்ன உங்களுக்கும் இந்த அனுபவம் உள்ளதா?
ஆல்கஹாலுக்கு அடிமையாகும் அறிகுறிகளை கண்டறிவதன் மூலம், அது தனது முழு சுயரூபத்தையும் காட்டுவதை ஆரம்பத்திலேயே முடக்கிப் போட முடியும்.

1. நேரம், காலம் எதையும் கணக்கில் கொள்ளாமல் நீங்கள் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலுடன் இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு மதுவை உள்ளே தள்ளியிருக்கிறீர்கள் என்று கணக்கு பார்க்கும் சக்தியையும் இழந்திருப்பீர்கள்.
2. குடிப்பதற்காகவே நீங்கள் தூக்கத்திலிருந்து விழிப்பீர்கள். இது உண்மையில்லாதது போல் இருந்தாலும், காலை நேரங்களில் குடிக்க விரும்புவர்கள் மதுவிற்கு அடிமையாகவே இருப்பார்கள்.
3. மீண்டும் குடிக்க வேண்டும் என்ற உணர்வு அதீதமாக இருக்கும். உங்களுடைய உண்மையான சூழ்நிலையை இந்த உணர்வு மறக்கச் செய்து விடும், ஆனால் உண்மை நிலையில் இருந்து உங்களால் தப்பிச் செல்ல முடியாது.
4. மதுப்பழக்கத்தின் போது வியர்வை, நடுக்கம், ருசி மங்குதல் மற்றும் வெறுப்பு போன்ற அறிகுறிகளை அனுபவிப்பீர்கள்.
5. நீங்கள் தினசரி செய்து வரும் செயல்பாடுகள் மற்றும் மற்றவர்களுடன் பழகுதல் போன்ற விஷயங்களை ஆல்கஹால் உலை வைத்து விடும்.
6. நீங்கள் விரும்பும் மனிதர்கள் பெருமையுள்ள இடத்திலிருந்து மதுவின் காரணமாக விழுந்திருப்பார்கள். உங்களுடைய பாதையில் அழிவை உங்கள் நண்பர்கள் பார்த்திருந்தாலோ அல்லது உங்களை தனிமைப்படுத்தி விட்டாலோ, அது நீங்கள் கண்டிப்பாக பின்னோக்கி நகர்ந்து சென்று தவறைத் திருத்திக் கொள்ள வேண்டிய தருணம் என்று உணருங்கள்.
7. மதுவிற்கு அடிமையாகத் தொடங்கும் உங்களுடைய எடை குறையும் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
மதுப்பழக்கம் குடும்பங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், விதியற்றுப் போய்விடவும் செய்து விடுகிறது. ஆனால், அவ்வப்போது அளவுடன் மது அருந்துவது ஒன்றும் பாதுகாப்பற்ற விஷயம் கிடையாது. எனவே, பொறுப்பை உணர்ந்து குடியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications