For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க... புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்...

By Maha
|

தற்போதுள்ள காலத்தில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது புற்றுநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றால் தான். இதில் மிகவும் கொடியது என்றால் அது புற்றுநோய் தான். அக்காலத்தில் எல்லாம் புற்றுநோய்க்கு சரியான மருத்துவம் இல்லாததால் நிறைய மக்கள் இறந்தனர். ஆனால் இக்காலத்தில் மருத்துவ முன்னேற்றத்தினால், புற்றுநோயை சரிசெய்ய முடிகிறது.

சரி, புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்று யாராவது யோசித்துள்ளீர்களா? இல்லை. ஏனெனில் எப்போதுமே ஒரு நோய் வந்த பின்னர் தான் அது எதற்கு வந்துள்ளது என்று தெரிந்து கொள்வோம். ஆனால் இப்படி அனைத்து விஷயங்களிலும் இருந்தால், பின் ஒரு கட்டத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பிறகு எந்த ஒரு மருத்துவ உதவியினாலும் சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டு, இறப்பை சந்திக்கக்கூடும்.

அடேங்கப்பா... புற்றுநோய்ல இத்தனை வகையா...?

எனவே அனைவருமே கொடிய நோயான புற்றுநோய் வருவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். அத்தகைய உணவுகளைப் பார்த்தால், தற்போது அன்றாடம் அனைவரும் சாப்பிட்டு வருபவையாகத் தான் இருக்கும். ஆகவே அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்தால், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

சரி, இப்போது புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள் எவையென்று பார்ப்போமா!!!

ஆண்களை அதிகம் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் 9 வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்டு கடைகளில் விற்கப்படும் உணவுகள் தான் இருப்பதிலேயே மிகவும் மோசமானது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தான் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இறைச்சிகளை பதப்படுத்த நிறைய கெமிக்கல்களைப் பயன்படுத்துவதால், அவற்றை மனிதன உட்கொண்டால், அவை மனிதனின் உடலில் சென்று நினைத்து பார்க்க முடியாத அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தும். மேலும் ஆய்வு ஒன்றில், தொடர்ந்து பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எடுத்து வந்தால், 44 சதவீதம் விரைவிலேயே மரணத்தை சந்திக்கக்கூடும் என்று சொல்கிறது. ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எளிதில் அதிகரிக்கிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ்

நிறைய பேருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடித்ததாக இருக்கும். ஆனால் அதனை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், அதில் பதப்படுத்த, சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களானது, புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே உருளைக்கிழங்கு சிப்ஸ் அதிகம் சாப்பிட வேண்டாம்.

ஹைட்ரோஜினேட்டட் அல்லது வெஜிடேபிள் ஆயில்

ஹைட்ரோஜினேட்டட் அல்லது வெஜிடேபிள் ஆயில்

வெஜிடேபிள் எண்ணெயில் அளவுக்கு அதிகமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. பொதுவாக எதுவுமே அளவுக்கு அதிகமாக சென்றால் மிகவும் ஆபத்தானது. அதேப் போல தான் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அவை உடலில் இதய நோய் முதல் புற்றுநோய் வரை கொண்டு வந்துவிடும்.

வறுத்த மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்கள்

வறுத்த மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்கள்

வறுத்த மற்றும் உப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுகளான சாசேஜ், பேகான், சலாமி போன்றவற்றில் உப்பு அதிகம் இருப்பதுடன், அதனை அதிகம் உண்ணும் போது, உடல் பருமனை அதிகரிப்பதுடன், உடலில் தேவையில்லாத வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் கிளைசீமிக் என்னும் பொருள் நிறைந்துள்ளது. கிளைசீமிக் என்றாலே கார்சினோஜென்கள் தான். இவற்றை அதிகம் எடுத்து வரும் போது, அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள்

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள்

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையானது நீரிழிவை ஏற்படுத்துவதுடன், அவற்றில் ஃபுருக்டோஸ் அதிகம் இருப்பதால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும். எனவே இந்த சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

செயற்கை சுவையூட்டிகள்

செயற்கை சுவையூட்டிகள்

ஆம், சர்க்கரை ஒரு செயற்கை சுவையூட்டி. இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் புற்றுநோய் செல்களை அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த செயற்கை சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், அவை உடல் பருமனை அதிகரித்துவிடும்.

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்களான கோக், சோடா போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்படக்கூடும்.

டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள்

டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள்

டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இதில் உணவுகளை வைக்கும் போது, டின்களில் உள்ள கெமிக்கல்களானது உணவில் கலந்துவிடும். பின் இதனை தொடர்ந்து நாம் உட்கொண்டால், அவை உடலில் மிகவும் மோசமான புற்றுநோய் செல்களை உற்பத்தி செய்து, உயிருக்கே உலை வைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Cancer Causing Foods You Eat Very Often

There are numerous foods that come under the daily scanner of 'foods that increase the risk of cancer'. This article looks at 10 cancer causing foods we consume all too often.
Desktop Bottom Promotion