Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

நாளொன்றுக்கு 11 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரெசென்டீசம் (“presenteeism”) எனப்படும் நோய் தாக்குகிறதாம். மனஅழுத்தம், முதுகுவலி, இதயநோய், உயர்ரத்த அழுத்தம், வாய்வு கோளாறுகள் ஏற்படுவதே இந்த பிரெசென்டீசம் நோயின் அறிகுறி என்கிறது மருத்துவ அகராதி. வேலை என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதுதான். அந்த வேலையே உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒய்வு இல்லாத வேலை
தினசரி எட்டுமணிநேரம் வேலை ஓய்விற்கு எட்டுமணி நேரம் உறக்கம் என்பது அவசியமானது. ஆனால் ஒருசிலர் வேளைப் பளு அதிகமானதன் காரணமாக தினசரி 11 மணி நேரத்திற்கும் மேலாக கணினியில் வேலை பார்க்கின்றனர். இதனால் அவர்களை ப்ரிசென்டீசம் நோய் தாக்குகிறது. ஓய்வு இல்லாத வேலையினால் முதுகுவலி, நரம்பு கோளாறுகள், மன அழுத்தம், செரிமான பாதிப்பு போன்றவையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்தில் 2000 நடுத்தர வயதுடைய ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதை அடுத்து இங்கிலாந்திலும், ஐரோப்பிய யூனியனிலும் வாரத்தில் 48 மணிநேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர். இதுவே இவர்களை நோய்களில் கொண்டுபோய் தள்ளுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் மரணம்
இதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தினமும் ஆபீஸ், டிவி, கம்ப்யூட்டர் என 11 மணி நேரம் உட்கார்வது உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை முதுநிலை ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்துள்ளார். அலுவலகத்தில், டிவி, கம்ப்யூட்டர் முன்பு என அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆக்டிவா இருங்க
நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தை குறைப்பது மிகமிக அவசியம். அலுவலகத்தில், கம்ப்யூட்டர், டிவி முன்பு, பஸ், டூவீலர் வாகனங்களில் செல்வது உள்பட உட்காரும் நேரத்தை முடிந்தவரை குறையுங்கள். முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்துசெல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என ஆக்டிவ் ஆக இருங்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாக உட்கார்ந்திருப்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.7 கோடி இறப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் ஓய்வாக இருக்கும் பெரும்பாலான நேரத்தை டிவி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்கள் வீணடிக்கின்றன. இவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வை தரும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications