Latest Updates
-
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் ஜூலை 16-ல் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்

ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுதும் பெண்களுக்கு கருப்பையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு கருப்பை புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆய்வின்போது ஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்பை புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பல்கலைகழக புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் உயரம் ஏன் கருப்பை புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.
உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கும் இதுவே காரணமாக அமைகிறது. உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள். ப்ளாஸ் மெடிசின் என்ற மருத்து இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications