Latest Updates
-
பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்... -
புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... தோசை, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்? - டாக்டர். பிள்ளை விளக்கம் -
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்! -
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க...

தீக்காயங்கள் பெரியதாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆனால் சிறு காயங்கள் என்றால் அதை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரிசெய்ய முடியும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!
காயத்தால் ஏற்பட்ட எரிச்சலை குறைக்க...
ஐஸ் : தீக்காயங்களால் ஏற்படும் எரிச்சலுக்கு ஐஸ் ஒரு சிறந்த மருந்தாகும். தீக்காயத்தால் எரிச்சல் ஏற்படும் போது, முதலில் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகளை எடுத்து 5-10 நிமிடம் வைக்க வேண்டும். ஏனெனில் அவை குளிர்ச்சியாக இருப்பதால், எரிச்சல் இருக்கும் இடத்தில் இருந்து வெப்பத்தை எடுத்துவிடும். மேலும் இவை அந்த இடத்தில் வலியை குறைப்பதோடு, புண் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.
தக்காளி : தக்காளியானது இயற்கையாகவே சருமத்திற்கு மிகவும் நல்ல பொருள். மேலும் இது தீக்காயங்களால் ஏற்பட்ட எரிச்சலையும் நீக்கும். தக்காளியை நறுக்கிக் கொண்டு, எரிச்சல் இருக்கும் இடத்தில் சாறு முழுவதும் வற்றும் வரை வைக்கவும். இதனால் எரிச்சலானது முற்றிலும் உடனடியாக நீங்கிவிடும்.
முட்டை : முட்டையின் வெள்ளைக் கருவை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து, காய வைக்க வேண்டும். இவ்வாறு பல முறை செய்தால் தீக்காயங்களால் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் புண் சரியாகும். இது காயங்களால் ஏற்பட்ட எரிச்சலுக்கு மிகவும் சிறந்தது.
மஞ்சள் : மஞ்சளானது அனைத்து வகையான காயங்களுக்கும் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். அத்தகைய மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து காய வைத்து, பின் கழுவ வேண்டும். மறுபடியும் அந்த பேஸ்டை அந்த இடத்தில் தடவ வேண்டும். பிறகு பாருங்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் எந்த ஒரு வலியும் இருக்காது.
கற்றாழை : கற்றாழை ஒரு அருமையான செடி. இது ஒரு சிறந்த வலி நிவாரணி என்றும் சொல்லலாம். தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள், வீட்டில் கற்றாழைச் செடி இருந்தால், அதன் தண்டை வெட்டி, அதில் இருக்கும் ஜெல் போன்ற திரவத்தை எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இதனால் வலி மட்டும் போவதோடு, காயம் ஏற்பட்ட இடத்தில் வடுவானது நிரந்தரமாக இருக்காமல், போய்விடும்.
டூத் பேஸ்ட் : இது ஒரு சிறந்த வலி குறைப்பான் என்று சொல்லலாம். காயம் ஏற்பட்ட இடத்தில் சிறிது டூத் பேஸ்டை தடவி, காய வைத்து கழுவ வேண்டும். வலி போகவில்லை என்றால், வேண்டுமெனில் அதனை தொடர்ந்து 2-3 முறை செய்யலாம். இப்போது இந்த முதலுதவி எப்படி வலியை குறைத்து நிம்மதியைத் தருகிறது என்று பாருங்கள்.
மேற்கூரிய வீட்டுப் பொருட்களையெல்லாம் காயம் ஏற்பட்ட இடத்தில் பயன்படுத்தினால் வலி மற்றும் எரிச்சல் குறைவதோடு, சருமத்திற்கும் மென்மையைத் தருகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











