Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
மார்பகத்தை பெரிதாக்குவதால் புற்றுநோய் ஆபத்து: ஆய்வு முடிவு

மார்பகத்தை பெரிதாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையினால் புற்றுநோய் ஆபத்து இருமடங்கு அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மார்பகத்தை அடர்த்தியாக்கும் சிகிச்சை செய்துகொண்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மார்பத்தை பெரிதாக்கிய 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை ஆய்வு செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.
அடர்த்தியான மார்பகங்களுக்ககாக செலுத்தப்பட்ட திசுக்கள்தான் இந்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்றனவாம். அடர்த்தியான மார்பகங்களை பொருத்தியவர்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மார்பகத்தின் திசுக்கள் வெள்ளையாகவும், கருப்பாகவும் இருந்தது. இதில் வெள்ளை பகுதி அடர்த்தியாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட திசுக்கள். கருப்பு பகுதி கொழுப்பு திசுக்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் 50 வயது முதல் 74 வயதுடைய 1,177 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மார்பகத்தை அடர்த்தியாக்கியதன் மூலம் மெனோபாஸ் பருவம் முன்னதாகவே தொடங்கியது தெரியவந்தது.
ஆஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வந்துள்ளது. இதுவே மார்பகத்தின் கட்டி வளர்வதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மார்பகத்தை அடர்த்தியாக்குவதற்காக பொருத்தப்பட்ட திசுக்கள் மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு காரணமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளை வியன்னாவில் நடைபெற்ற எட்டாவது ஐரோப்பிய மார்பகப்புற்றுநோய் மாநாட்டில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications