Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
அம்மை நோய் வரப்போகுது! உஷாரா தடுப்பூசி போடுங்க!

இது வெயில் மற்றும் மழை கலந்த காலகட்டத்தில் பரவக் கூடியது. அப்போது தான் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. முதலில் காய்ச்சல், சளி என தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்களை உண்டாக்கும்.
அம்மை நோயின் அறிகுறிகள் மற்றும் தாக்கம் குறைய
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.
சின்னம்மை என்றால் உடலில் கொப்புளங்கள் தோன்றும். அந்த கொப்புளங்கள் உடைந்து நீர் வடிந்து, அது வடுவாக மாறிவிடும். மேலும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.
குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்துவிட்டால் மறுபடியும் வர வாய்ப்பில்லை. ஏனென்றால் அதன் தடுப்பாற்றல் வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும்.
அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க தடுப்பூசியைக் குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து போட வேண்டும். பிறகு குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டும். இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும்.
இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். தான்றிக்காய் தோலை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அம்மை நோயின் தாக்கம் குறையும்.
தவிர்க்க வேண்டியது
அம்மை நோய் வந்தால் வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மை நோயின் போது ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இவற்றை முற்றிலும் தடுக்க வேண்டியது அவசியம்.
எனவே மறக்காம தடுப்பூசி போடுங்க! அம்மை நோயைத் தடுங்க !!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications