Latest Updates
-
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
திடீர்னு நடுராத்திரியில் காய்ச்சல் வந்துடுச்சா? அப்ப இந்த கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க..
முன்பெல்லாம் நம் முன்னோர்கள் காய்ச்சலுக்கு என்ன மருந்து மாத்திரைகளையா எடுத்தார்கள். கை வைத்தியம் தானே பார்த்தார்கள். எனவே உங்களுக்கு காய்ச்சல் வந்தால் கை வைத்தியங்களை முதலில் முயற்சி செய்யுங்கள்.
தற்போது குளிர்காலம் என்பதால் நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் மட்டுமின்றி, காய்ச்சலாலும் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல் என்பது உடலின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகும். இது உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்றாகும். இந்த காய்ச்சல் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலானோர் வருடத்திற்கு 2-3 முறை காய்ச்சலால் அவதிப்படுவதுண்டு.

பொதுவாக காய்ச்சல் வந்தால், அதை குறைக்க நிறைய பேர் வீட்டில் உள்ள மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி எடுப்பார்கள். ஆனால் அப்படி மருந்தை அதிகம் எடுத்தால், அதன் விளைவாக உள்ளுறுப்புகள் தான் அதிகம் பாதிக்கப்படும். முன்பெல்லாம் நம் முன்னோர்கள் காய்ச்சலுக்கு என்ன மருந்து மாத்திரைகளையா எடுத்தார்கள். கை வைத்தியம் தானே பார்த்தார்கள். எனவே உங்களுக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்து மாத்திரைகளை எடுக்காமல், கை வைத்தியங்களை முதலில் முயற்சி செய்யுங்கள். கீழே காய்ச்சலைக் குறைக்கும் சில எளிய கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

துளசி
புனிதமான துளசி பல நோய்களை சரிசெய்ய உதவுகிறது. இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் உள்ளன. எனவே இது தொண்டை புண் முதல் காய்ச்சல் வரை பலவற்றை சரிசெய்ய உதவுகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால், சிறிது சூரியகாந்தி விதைகளை அரைத்து, அத்துடன் தேன் மற்றும் துளசியை வைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை உங்களால் இவ்வாறு சாப்பிட முடியாவிட்டால், துளசி டீ தயாரித்து குடியுங்கள். இது காய்ச்சலைக் குறைக்கும்.

புதினா மற்றும் இஞ்சி
நற்பதமான மூலிகை டீ காய்ச்சலைக் குறைக்க உதவும். அதுவும் இஞ்சி மற்றும் புதினா இலைகளைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், காய்ச்சலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். அதற்கு புதினா மற்றும் இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

மஞ்சள்
அன்றாட சமையலில் பயன்படுத்தும் முக்கியமான மசாலா பொருள் தான் மஞ்சள். மஞ்சள் பாலை காய்ச்சல் அடிக்கும் போது குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

சந்தனம்
சந்தன பேஸ்ட் அதிகளவில் இருக்கும் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதை அளவுக்கு அதிகமாக காய்ச்சல் அடிக்கும் போது நெற்றியில் தடவும் போது, அது அதிகப்படியான உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். அக்காலத்தில் நம் முன்னோர்கள் அதிக காய்ச்சலுக்கு இந்த முறையை பயன்படுத்தியுள்ளார்கள்.

பூண்டு
பூண்டில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. எனவே இது வைரஸ் காய்ச்சலை சரிசெய்வதில் சிறந்தது. பழங்காலத்தில் காய்ச்சலைக் குறைக்க 2-3 பூண்டு பற்களை தட்டி, 1/4 கப் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்நீரைக் குடிப்பார்களாம்.



Click it and Unblock the Notifications