Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
தாங்க முடியாத பல்வலியா? இந்த ஒரு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!
பல்வலி தாங்க முடியாது. பற்கள் மூளைக்கு அருகில் இருப்பதால் பல் வலியால் நரம்புகளும் பாதிக்கும் . அதனால் தலைவலியையும் உண்டாக்கும். அப்படியான பல் வலியை போக்கும் இந்த வைத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிக இனிப்பு சாப்பிடுவதாலும் சரியாக பராமரிக்கவில்லையென்றாலும் பற்களில் கிருமிகள் தாக்கம், பற்சிதைவு, ஈறு வீக்கம் ஆகியவை உண்டாகக் கூடும்.

இதன் காரணமாக வரும் பல்வலி தாங்க முடியாததாக இருக்கும். இந்த வலியை போக்குவதற்கும் ப்ல பிரச்சனையை போக்குவதற்குமான ஒரு வழி இங்கே சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

ஆரோக்கியமான ஈறு எது?
ஆரோக்கியமான ஈறு பற்களை இறுக பற்றியிருக்கும். அடர் பிரவுன் மற்றும் பிங்க் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஈறாகும். அதுவே செக்க சிவப்பாய் சிவந்திருந்தால் அந்த ஈறு மிகவும் பாதிப்ப்டைந்திருக்கிறது என அர்த்தம்

பல் வலி போக்கும் சிகிச்சை
தேவையானவை :
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கிராம்பு பொடி - அரை ஸ்பூன்

செய்முறை :
முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போலக் கலக்குங்கள்.

செய்முறை :
இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும்.

பலன் :
இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும். தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.



Click it and Unblock the Notifications