Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
நைட் தூக்கமே வரமாட்டீங்குதா? இந்த பாலை 1 டம்ளர் குடிங்க.. படுத்ததும் தூங்கிடுவீங்க..
Sleep Deprivation: ஒருவரது உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், இரவு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றால் தான், உடலும், மனமும் சீராக செயல்படும். ஆனால் தற்போது நிறைய பேர் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இப்படி ஒருவர் தூக்கத்தைத் தொலைப்பதற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.
தற்போதைய அவசர உலகில் மன அழுத்தத்தால் ஏராளமானோர், அவர்களை அறியாமலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் தான் இரவு நேரத்தில் தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. இப்படியே சரியான தூக்கத்தைப் பெறாமல் போனால், அதன் விளைவாக உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக சரியான தூக்கத்தைப் பெறாவிட்டால், அதன் விளைவாக முதலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். அதைத் தொடர்ந்து பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.

நீங்கள் இப்படி இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருந்தால், உடனே அந்த பிரச்சனையை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். எனவே உங்களுக்காக தூக்க பிரச்சனையை சரிசெய்ய உதவும் ஒரு அற்புதமான பால் ரெசிபி குறித்து கொடுத்துள்ளோம். இந்த பாலானது அஸ்வகந்தா, ஜாதிக்காய், மஞ்சள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இப்பொருட்கள் அனைத்தும் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் அடைய செய்வதோடு மட்டுமின்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இப்போது இந்த பாலை எப்படி தயாரிப்பது என்பதையும், இந்த பால் எப்படி நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது என்பதையும் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* பால் - 1 டம்ளர்
* அஸ்வகந்தா பவுடர் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஜாதிக்காய் பவுடர் - 1 சிட்டிகை
பால்
பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது நல்ல தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது. மேலும் பாலில் புரோட்டீன், வைட்டமின்கள், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா ஒரு மருத்துவ பண்புகள் நிறைந்த மூலிகை என்பதை அனவரும் அறிவோம். இது ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக அஸ்வகந்தா மன அழுத்தம், பதட்ட உணர்வு போன்றவற்றை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது. மேலும் இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலின் வலிமையையும் அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. மேலும் மஞ்சளில் கார்மேட்டிவ் விளைவுகளும் இருப்பதால், இது செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் ஒரு அடாப்டோஜென் ஆகும், இது நம் உடலுக்கு ஒரு மயக்க மருந்தாக செயல்படுகிறது. மேலும் இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலுக்கு நல்ல ஓய்வளித்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைவான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் அஸ்வகந்தா பவுடர், மஞ்சள் தூள், ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து, 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











