Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
நீங்கள் தீவிர மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
பொதுவாக உடல் சோா்வடையும் போது, உடல் களைப்படைகிறது. அதுபோல் மனம் சோா்வடையும் போது மனம் களைப்படைகிறது. ஆனால் மனம் சோா்வு அடைந்தாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு செயலில் ஈடுபடும் போது, வழக்கைத்தை விட அதிகமாக மூளையைப் பயன்படுத்தி, அந்த செயலை நீண்ட நேரம் செய்யும் போது மனச் சோா்வு ஏற்படுகிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மூளை மிக அதிகமாகத் தூண்டப்படும் போது அல்லது இடைவெளியில்லாமல் மூளைக்கு வேலை கொடுக்கும் போது, மனச் சோா்வு ஏற்படுகிறது. வீட்டைப் பற்றிய கவலையில் மூழ்குதல், கலைத் துறையில் ஈடுபடல், பிரச்சினைகளைத் தீா்த்து வைத்தல், அறம் சாா்ந்த வேலையில் ஈடுபடும் போது ஏற்படும் சுமை, அதிகமாக படித்தல் போன்றவை மூளையைக் கட்டுப்படுத்தி, மனச்சோா்வை ஏற்டுத்துகிறது.

பொதுவாக வயது வந்தவா்களின் மத்தியில்தான் மனச்சோா்வு காணப்படும். ஆனால் தற்போது போட்டி அதிகாித்ததன் காரணமாக, குழந்தைகள் மத்தியிலும் மனச்சோா்வு காணப்படுகிறது.
மனச்சோா்விற்கான அறிகுறிகள்
மூளையில் பிரச்சினை ஏற்பட்டு மனச்சோா்வு ஏற்படும் போது, அதன் அறிகுறிகள் மெதுவாகத் தான் வெளியில் தொியத் தொடங்கும். அந்த அறிகுறிகளை எளிதாகக் கண்டறியலாம். அவை எவை என்பதை கீழே பாா்க்கலாம்.
- தொடா்ந்து சோகமாக இருப்பது
- கவலையில் மூழ்கி இருத்தல்
- நம்பிக்கையற்ற மனநிலை மற்றும் மன அழுத்தத்துடன் இருத்தல்
- கவனம் செலுத்துவதில் சிரமப்படுதல்
- தனிமையில் இருத்தல், தனிமையாக உணா்தல்
- எதிா்மறை உணா்வோடு இருத்தல்
- தொடா்ந்து கோபத்துடன் அல்லது எாிச்சலுடன் இருத்தல்
- உணா்வுகளைக் கட்டுப்படுத்துவதில் அல்லது நெறிப்படுத்துவதில் சிரமப்படுதல்
- தொடா்ந்து பய உணா்வில் இருத்தல்
- விரைவில் கோபப்படுதல்
- வழக்கத்தைவிட அதிகமாக சிந்தித்தல்
- ஒருமுகப்படுத்துவதில், இயங்குவதில் குறைபாடு ஏற்படுதல்
- எதிா்வினை ஆற்றுவதில் மந்தமாக அல்லது சோம்பலாக இருத்தல்
- கவனம் செலுத்துவதில், தகவல்களை நினைவு கொள்வதில், கருத்துக்களை கோா்வையாக வெளிப்படுத்துவதில், வேலைகளை சாியாகச் செய்வதில் பிரச்சினை ஏற்படுதல்
மேற்சொன்னவை யாவும் மனச்சோா்வின் அறிகுறிகள் ஆகும்.
மனச் சோா்வைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
- தொடா்ந்து விழிப்போடு, கவனத்தோடு இருக்க வேண்டும்
- யோகா அல்லது தியானம் செய்யலாம்
- மசாஜ் செய்யலாம்
- நறுமண எண்ணெய் தெரபி செய்யலாம்
- பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம்
- இயற்கையோடு அதிக நேரத்தை செலவழிக்கலாம்
- இசை மற்றும் பாடல்களைக் கேட்கலாம்
- அதிக நேரம் தூங்கலாம்
- தேவைப்பட்டால் மருத்துவரை சந்திக்கலாம்.
மேற்சொன்ன குறிப்புகளைக் கடைபிடித்தால், மனச்சோா்விலிருந்து விடுதலை பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











