கோடையில் நீங்க தினமும் தயிர் சாப்பிடக்கூடாதாம்...மீறி சாப்பிட்டா என்ன நடக்கும்? ஏன் சாப்பிடக்கூடாது?

கொளுத்தும் கோடை வெயிலிலிருந்து உங்களை பாதுகாக்கவும், குளிர்ச்சியாக வைத்தியிருக்கவும் குளிர்ச்சி உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில், தயிர் ஓர் முக்கியமான உணவு பொருளாக உள்ளது. இதை கோடை காலத்தில் அனைவரும் சாப்பிட விரும்புவார்கள்.

கோடையில் உடலையும் வயிற்றையும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க, தயிர் சாப்பிட நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகிறது. தயிர் புரோபயாடிக்குகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு. இதில் நல்ல அளவு புரதம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Reason Why Curd Should Not Be Consumed Daily In Summers In Tamil

தயிர் சாப்பிட்ட பிறகு, சிலருக்கு பருக்கள், முகப்பரு, தோல் ஒவ்வாமை, செரிமான பிரச்சனைகள், உடலில் அதிக வெப்பம் போன்ற பிரச்சனைகள் வருவதாகக் கூறப்படுகிறது. தயிர் வெப்பமூட்டும் பண்புகளைக் காட்டிலும் குளிரூட்டும் பண்புகளை அதிகம் கொண்டிருக்கிறது. பலர் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்.

ஆயுர்வேதத்தின் படி, பண்டைய இந்திய மருத்துவ முறை, கோடையில் தயிர் உட்கொள்வது உடலில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒரு நபரின் தோஷம் - வாத, பித்த அல்லது கபா போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

இவை மட்டுமில்லாமல், தயிரை நாம் எந்த நேரம் சாப்பிடுவது நல்லது என்றும் ஆயுர்வேதம் நமக்கு கூறுகிறது. அந்த வகையில், கோடையில் ஏன் தயிர் தினமும் சாப்பிடக்கூடாது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தயிர் ஏன் உடல் சூட்டை அதிகரிக்கிறது?
சிறுவயதில் இருந்தே தயிர் குளிர்ச்சி தரும் உணவாக இருப்பதால், அதை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் ஆயுர்வேதத்தின் படி, தயிர் சுவையில் புளிப்பு மற்றும் சூடான தன்மை கொண்டது. மேலும் ஜீரணிக்க கனமானது என்று கூறப்படுகிறது. எனவே இது கபா மற்றும் பித்த தோஷத்தில் அதிகமாகவும், வாத தோஷத்தில் குறைவாகவும் இருக்கும். எனவே எந்த பருவத்திலும் தயிர் சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

கோடையில் தயிர் சாப்பிட்டால், உடல் சூட்டை குறைப்பதற்கு பதிலாக சிலருக்கு உடல் சூட்டை அதிகரிக்கும். மேலும், ஆரோக்கியமாக இருப்பதாகக் கருதி தயிரை அதிகமாக உட்கொண்டால், முகத்தில் பருக்கள் மற்றும் பல முக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும், நீங்கள் தயிரை சரியான முறையில் உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தத் தீங்கும் செய்யாது.

தயிர் உட்கொள்ளும் வழிகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, கோடையில் தயிர் தினமும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது உடலை சூடாக்கும். கல் உப்பு, கருப்பு மிளகு மற்றும் சீரகம் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் மோரை மட்டுமே தினசரி உட்கொள்ள வேண்டும். அதனால், நீங்கள் தினமும் மோர் குடிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தயிரில் தண்ணீர் சேர்க்கப்படும் போது, அது வெப்ப விளைவுகளை சமன் செய்கிறது. தண்ணீர் வெப்பத்தை குறைக்கிறது மற்றும் தயிர் ஒரு குளிர்ச்சி விளைவை சேர்க்கிறது. எனவே கோடையில் தயிரை ருசிக்க விரும்பினால், தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து எப்போதும் சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் நீங்கள் பெறலாம்.

மேலும், தயிரை சூடாக்கக்கூடாது. ஏனெனில் அது சூடுபடுத்துவதால் அதன் குணங்களை இழக்கிறது. கப தோஷம் அதிகமாக இருப்பதால் உடல் பருமன் உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது. ஆயுர்வேதமும் தயிரை பழங்களுடன் கலக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. ஏனெனில் இது பொருந்தாத கலவையை உருவாக்கி, உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, May 26, 2023, 18:15 [IST]
Desktop Bottom Promotion