Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பெண்களே! சானிட்டரி பேடுகளை பயன்படுத்தும் போது ஒருபோதும் இந்த தவறுகளை செய்யாதீங்க...
Menstrual Hygiene Day 2023: ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் கருப்பையில் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்களைக் குறிக்கிறது. மாதவிடாய் சுழற்சியின் போது 3-5 நாட்கள் வரை பெண்களின் உடலில் இருந்து இரத்தம் வெளியேற்றப்படும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி நிகழும். மாதவிடாய் சுழற்சி காலத்தில் பெரும்பாலான பெண்கள் சானிட்டரி பேடுகளை பயன்படுத்தி வருகிறார்கள். சானிட்டரி பேடுகளை பயன்படுத்தும் போது ஒருசில விஷயங்களை அவசியம் நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டும்.

மாதவிடாய் கால சுகாதாரம் என்பது மிகவும் இன்றியமையாதது. மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்துடன் இல்லாவிட்டால் அது யோனியில் மட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்தாது, கருப்பையிலும் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த மே 28 ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, சானிட்டரி பேடுகளை பயன்படுத்தும் போது பெண்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடுகளை மாற்றவும்
மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி பேடுகளை 4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். மாதவிடாய் காலத்தில் வெளியேறும் இரத்தமானது பல்வேறு கிருமிகளை ஈர்க்கும் திறன் கொண்டது. ஈரப்பதமான பகுதிகளில் கிருமிகள் பன்மடங்கு பெருக்கமடைந்து, எரிச்சல், அரிப்பு அல்லது சிறுநீர் பாதை தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும், தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கவும், சானிட்டரி பேடுகளை 4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
யோனியை சரியாக சுத்தம் செய்யவும்
யோனி பகுதியை சீரான இடைவெளியில் சரியாக சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம். சானிட்டரி பேடுகளை அகற்றிய பின் பெண்கள் தங்களின் யோனி பகுதியை நீரால் தவறாமல் கழுவுவார்கள். ஆனால் நிறைய பெண்கள் சரியான வழியில் யோனியை கழுவுவதில்லை. அதாவது, பல பெண்கள் யோனியை பின்பக்கம் இருந்து முன்பக்கமாக கழுவுகிறார்கள். இப்படி கழுவும் போது, ஆசனவாயில் உள்ள கிருமிகள் யோனியை அடைந்து, யோனியில் மட்டுமின்றி, சிறுநீர்க்குழாயிலும் தொற்றுக்களை ஏற்படுத்திவிடும். எனவே எப்போதும் யோனியை கழுவும் போது, முன்பக்கம் இருந்து பின்பக்கமாக கழுவ வேண்டும்.
சோப்பு அல்லது யோனியை சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது
மாதவிடாய் காலத்தில் யோனி பகுதியை சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்துவது சரியான யோசனையாக தோன்றலாம். ஆனால் இந்த பொருட்களை நன்மையை விளைவிப்பதை விட தீங்கையே விளைவிக்கும். பொதுவாக மாதவிடாய் காலத்தில் யோனியானது தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. செயற்கை பொருட்களால் யோனியை சுத்தம் செய்தால், அது யோனியில் நிகழும் இயற்கை செயல்முறைக்கு இடையூறை ஏற்படுத்தி தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.
சானிட்டரி பேடுகளை சரியாக அப்புறப்படுத்தவும்
சானிட்டரி பேடுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். எப்போதும் பேடுகளை டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது அடைப்பை ஏற்படுத்திவிடும். எனவே பயன்படுத்திய பேடுகளை சரியாக மடித்து ஒரு பேப்பரில் வைத்து மடித்து தூக்கி எறிய வேண்டும். முக்கியமாக பேடுகளை தொட்ட பின் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
ஒரு சுகாதார முறையை பின்பற்றவும்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கின் போது ஒன்றிற்கு மேற்பட்ட சானிட்டரி பேடுகளை ஒரே நேரத்தில் வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் இது மிகவும் மோசமான பழக்கம் மற்றும் இது கடுமையான தொற்றுக்களை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு நேரத்தில் ஒரே ஒரு சானிட்டரி பேடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அதிக இரத்தப்போக்கு இருந்தால், அடிக்கடி பேடுகளை மாற்றுங்கள். இதைப் பின்பற்றினால், மாதவிடாய் காலம் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

