Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
தோள்பட்டை அடிக்கடி வலிக்குதா? அப்ப இந்த புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்...
Lung Cancer Symptoms In Tamil: உலகெங்கிலும் மாரடைப்பிற்கு அடுத்தப்படியாக, ஏராளமானோரின் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. புற்றுநோய்களிலேயே மிகவும் ஆபத்தான வகை என்றால் அது நுரையீரல் புற்றுநோய் தான்.
இது நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியினால் ஏற்படுகிறது. புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுத்து, முழுமையாக குணமாகலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது கடினம். ஏனெனில் இந்த வகை புற்றுநோய் முன்னேறும் வரை அறிகுறிகளை வெளிக்காட்டாது. அப்படியே அறிகுறிகளை வெளிக்காட்டினாலும், அந்த அறிகுறிகள் நாம் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றே இருக்கும்.
அதுவும் ஒருவர் திடீரென்று தொடர்ச்சியான இருமல் அல்லது எக்காரணமும் இல்லாமல் மூச்சுத்திணறலை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், இவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
தோள்பட்டை வலி எப்படி நுரையீரல் புற்றுநோயாக இருக்க முடியும்?
இது தவிர நுரையீரல் புற்றுநோயின் வேறுசில ஆச்சரியமான அறிகுறிகளும் உள்ளன. அதில் ஒன்று தான் தோள்பட்டை வலி. என்னது தோள்பட்டை வலி நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியா என்று பலரும் ஆச்சரியமாக கேட்கலாம். ஆனால் நுரையீரலில் உள்ள புற்றுநோய் கட்டியின் இடத்தைப் பொறுத்து, இது சில சமயங்களில் தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் வலியை உண்டாக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுவும் நுரையீரல் புற்றுநோய் தோள்பட்டை அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவினால், அது கடுமையான தோள்பட்டை வலியை உண்டாக்கலாம். அதற்காக தோள்பட்டை வலி அனைத்தும் நுரையீரல் புற்றுநோயாக இருந்துவிட முடியாது. பெரும்பாலும் மோசமான தோரணையின் காரணமாக இது ஏற்படலாம்.
ஆனால் தோற்பட்டை வலியை தொடர்ந்து அனுபவித்து வந்தால், நுரையீரல் கட்டி எலும்பின் மேற்புறத்தில் உருவாகி, கைக்குச் செல்லும் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, கை, கழுத்து பகுதி அல்லது தோள்பட்டையில் வலி மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தவிர இந்த கட்டியானது தலைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுத்து, முகத்தில் வீக்கத்தை உண்டாக்கலாம்.
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?
தொடர்ச்சியான இருமல் அல்லது நிமோனியா மீண்டும் மீண்டும் வந்தால், அது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நுரையீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் தொடர் இருமல், மூச்சுத் திணறல், மார்பு வலி, தொண்டை கரகரகப்பு அல்லது விவரிக்க முடியாத எடை இழப்பு போன்றவை அடங்கும்.
மேலும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் புற்றுநோய் கட்டி தொடங்கும் இடத்தைப் பொறுத்து, அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆனால் அதில் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிவது என்பது கடினம். ஆனால் புற்றுநோய் கட்டி வளர்ந்து முன்னேறும் போது அறிகுறிகள் தீவிரமாக தெரியத் தொடங்கும். எனவே உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கும் சந்தேகம் இருந்தால், உடனே பரிசோதனை செய்து பாருங்கள்.
நுரையீரல் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
நுரையீரல் புற்றுநோய் என்பது தொடர்ந்து பிரியும் மற்றும் பிறழ்வடையும் செல்களால் ஏற்படுகிறது. செல் பிரிவு என்பது ஒரு இயல்பான செயல்முறை என்றாலும், அனைத்து செல்களிலும் ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆஃப் சுவிட்ச் உள்ளது. இது செல்களை அதிகமாக பிரிவதைத் தடுக்கிறது அல்லது தேவைப்படும் போது அவற்றை இறக்க வைக்கிறது. ஒரு செல் பல முறை பிரிந்திருக்கும்போது அல்லது அதிக பிறழ்வுகளைக் கொண்டிருக்கும்போது ஆஃப் சுவிட்ச் தூண்டப்படுகிறது.
புற்றுநோய் செல்கள் உங்கள் நிணநீர் மண்டலத்திற்குள் நுழைந்து உங்கள் உடலின் பிற இடங்களுக்குச் சென்று சேதத்தைப் பரப்பக்கூடும். நுரையீரல் புற்றுநோய் இறப்புகளில் 80 சதவீதம் புகைபிடித்தலுடன் தொடர்பானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பவைகள் குறித்து காண்போம்.
* புகைப்பிடிப்பது மற்றும் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது
* காற்று மாசுபாடு, ஆஸ்பெஸ்டாஸ், ரேடான், யுரேனியம், டீசல் வெளியேற்றம், சிலிகா, நிலக்கரி பொருட்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு வெளிப்படுவது
* குடும்பத்தில் யாருக்கேனும் நுரையீரல் புற்றுநோய் இருப்பது
* மார்பக புற்றுநோய் அல்லது லிம்போமா போன்றவற்றிற்கு மார்பு பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பது போன்றவை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
அனைத்து நுரையீரல் புற்றுநோய் நிகழ்வுகளையும் தடுக்க முடியாது என்றாலும், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் அறியப்பட்ட கார்சினோஜன்களுக்கு வெளிப்படுவதை குறைப்பது ஆபத்தை கணிசமாகக் குறைக்கும்.
நுரையீரல் புற்றுநோய்க்கான முதன்மை ஆபத்து காரணிகளில் புகைபிடித்தல், இரண்டாம் நிலை புகைக்கு ஆட்படுதல் மற்றும் அஸ்பெஸ்டாஸ் அல்லது ரேடான் போன்ற சுற்றுச்சூழல் நச்சுப் பொருட்களுக்கு ஆட்படுதல் ஆகியவை அடங்கும்.
நுரையீரல் புற்றுநோய் எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகளின் மூலம் கண்டறியப்படுகிறது, அதைத் தொடர்ந்து புற்றுநோய் செல்கள் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு பயாப்ஸி செய்யப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் விளக்கமளிக்க முடியாத எடை இழப்பு ஆகியவை அடங்கும்.



Click it and Unblock the Notifications











