Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உங்க கழுத்து மற்றும் தொண்டையில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் புற்றுநோய் கட்டிகள் வளருதுனு அர்த்தமாம்!
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5.9% நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்;
இது புற்றுநோயின் நான்காவது பொதுவான வடிவமாகும். 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி , நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 67,795 ஆகவும், அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 63,475 ஆகவும் இருந்தது. நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 80% புகைபிடித்தலே காரணாமாக இருக்கிறது.

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன?
நுரையீரல் புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கான மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது.அதுமட்டுமின்றி புகை, காற்று மாசுபாடு மற்றும் ரேடான் போன்ற இரசாயனங்களின் வெளிப்பாடு, அஸ்பெஸ்டாஸ் ஆகியவை நுரையீரலில் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும், அதற்கு நோயைக் கண்டறிவது முக்கியம். நுரையீரல் புற்றுநோயின் சில அசாதாரண அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தோள்பட்டையில் வலி
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி தோள்பட்டையில் வலி அல்லது பலவீனத்தை உணர்கிறார்கள். இந்த தோள்பட்டை வலிக்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சிதான் காரணமாகும். புற்றுநோய் கட்டி தோள்பட்டை மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். தோள்பட்டை வலி தோளில் உள்ள நரம்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம் மற்றும் இது புற்றுநோய் தோள்பட்டை வரை பரவியதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
விழுங்குவதில் சிரமம்
டிஸ்ஃபேஜியா எனப்படும் விழுங்குவதில் உள்ள சிரமம் நுரையீரல் புற்றுநோயின் ஒரு முக்கிய அறிகுறியாகும். புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியால் உணவு செல்லும் பாதை தடைபடுகிறது. இந்த நிலை வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் மற்றும் மெலனோமா ஆகியவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
தொடர்ச்சியான நெஞ்சு வலி
புற்றுநோய் கட்டிகள் மார்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும்போது அல்லது நரம்புகளை அழுத்தினால், உங்கள் மார்பில் வலியை உணரலாம், குறிப்பாக ஆழமாக சுவாசிக்கும்போது, இருமல் அல்லது சிரிக்கும்போது, வலி ஏற்படலாம். மார்பு வலி என்பது உயிருக்கு ஆபத்தான பல நோய்களின் அறிகுறியாகும், குறிப்பாக மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது பெரும்பாலும் இரைப்பை அல்லது சில லேசான தற்காலிக பிரச்சனை என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
கரகரப்பான குரல்
புற்றுநோய் குரல்வளை நரம்பை அழுத்தும் போது, ஒரு நபர் கரகரப்பான குரலை உருவாக்குகிறார். நுரையீரல் புற்றுநோயாளிகளின் குரல் கரகரப்பானதாக இருப்பதற்கான மற்றொரு காரணம், நாள்பட்ட இருமல். புற்றுநோய் கட்டிகள் பொதுவாக குரல் நாண்களில் குறுக்கிடுகிறது.
முகம் மற்றும் கழுத்தில் வீக்கம்
கழுத்து மற்றும் முகத்தில் வீக்கம் நுரையீரல் புற்றுநோயைக் குறிக்கலாம். நுரையீரலில் உள்ள புற்றுநோய் வளர்ச்சியானது வேனா காவாவிற்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது இது நிகழ்கிறது, இது உயர் வேனா காவா நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

