Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
H3N2, கோவிட் தொற்றை கண்டுபிடிக்க இனி கஷ்டம் இருக்காது.. ஏன்னா அதுக்கான கருவி வந்தாச்சு..
சுவாச தொற்றுகளையும் வேறுபடுத்தி, சரியான சிகிச்சையை நோயாளிகளுக்கு எளிதில் வழங்கும் வகையில் ஒரு புதிய சோதனை கருவியை சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து, ஐசிஎம்ஆர்-ன் அனுமதியைப் பெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதலாக கோவிட்-19 வழக்கின் எண்ணிக்கை குறைந்து, அனைவரும் சாதாரண வாழ்க்கை வாழ ஆரம்பித்தோம். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரியில் இருந்து இன்ப்ளூயன்ஸா H1N1 வைரஸின் திரிபான H3N2 வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் தற்போது கோவிட்-19 தொற்றுகளின் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்விரு தொற்றுகளின் வழக்குகளும் அதிகரித்து வருவதால், எந்த தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவதில் சிரமம் இருந்தது.

இம்மாதிரியான சூழ்நிலையில் இவ்விரு தொற்றுகளையும் வேறுபடுத்தி, சரியான சிகிச்சையை நோயாளிகளுக்கு எளிதில் வழங்கும் வகையில் ஒரு புதிய சோதனை கருவியை சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அனுமதி அளித்துள்ளது.
சுவாசத் தொற்றுக்களை கண்டறிவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய RT-qPCR கருவியை சென்னையை அடிப்படையாக கொண்ட க்ரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் (KRIYA Medical Technologies) உருவாக்கியுள்ளது. இந்த கருவியானது KRIVIDA TRIVUS என்று அழைக்கப்படும். இந்த கருவியைக் கொண்டு மூன்று வகையான நோய்க்கிருமிகளை கண்டறிய முடியும். அவை இன்ஃப்ளூயன்ஸா (H1N1, H3N2, Yamagata மற்றும் Victoria sublineages), SARS CoV2 மற்றும் RSV போன்றவை ஆகும்.
இவற்றில் இன்ஃப்ளூயன்ஸா, SARS CoV2 மற்றும் RSV ஆகிய மூன்று தொற்றுகளுமே ஆரம்பத்தில் இருமல், தும்மல், உடல் பலவீனம், மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவை. இருப்பினும், ஒவ்வொன்றும் நாட்கள் செல்ல செல்ல வித்தியாசமாக பாதிக்கின்றன. எனவே ஆரம்பத்திலேயே ஒரு நோய்த்தொற்றை கண்டுபிடித்தால் தான், அதை எளிதில் சரிசெய்ய முடியும். அந்த வேலையை சுலபமாக்கவே இந்த புதிய RT-qPCR கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
க்ரியாவின் KRIVIDA TRIVUS சோதனைக் கருவியின் நன்மைகள்
* இந்த கருவியானது நோயாளியின் உடலில் எந்த வகையான வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டறிய உதவுகிறது.
* எந்த வகை வைரஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியும் போது அது நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு எளிதாகவும், உதவியாகவும் இருக்கும்.
* முக்கியமாக இந்த கருவி 50-60 நிமிடங்களுக்குள் முடிவை வழங்கும்.
இதுக்குறித்து க்ரியா மெடிக்கல் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான அனு மோடூரி கூறுகையில், சுவாச நோயை உண்டாக்கும் வைரஸ்களான இன்ஃப்ளூயன்ஸா, SARS CoV2, மற்றும் RSV ஆகியவற்றை எளிதில் கண்டறிவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சோதனை கருவி நிச்சயம் அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த கருவியானது வைரஸ்களை எளிதில் கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த கருவிக்கு சரியான நேரத்தில் அனுமதியளித்த ஐசிஎம்ஆர்-க்கு நன்றி தெரிவித்தார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












