100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா?

இந்தியாவில் விமானப் போக்குவரத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 487 விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் விமானம் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் பயணிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் தொடக்கமாக இருந்தது எந்த விமான நிலையம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Where Was India s First Airport Located

இந்தியாவில் ரயில்வே துறை எப்படி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டதோ அதேபோல இந்தியாவின் விமானப் போக்குவரத்தும் ஆங்கிலேயர்களால்தான் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பல சர்வதேச விமான நிலையங்கள் இருந்தாலும் இந்தியாவின் முதல் விமான நிலையம் எந்த நகரில் தொடங்கப்பட்டது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் முதல் விமான நிலையம்

'வில்லே பார்லே ஏவியேஷன் கிளப்' என்றும் அறியப்படும் ஜூஹு விமான நிலையம் (Juhu Aerodrome), 1928-ல் ஒரு தனியார் விமான இறங்குதளமாக நிறுவப்பட்டது. பின்னர் இது வணிக ரீதியான விமான நிலையமாக மாற்றப்பட்டு, 1932-ல் இங்கு முதல் வணிக விமானம் தரையிறங்கியது. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் போன்ற நவீன விமான நிலையங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஜூஹு விமான நிலையமே இந்தியாவின் முதன்மை விமான நிலையமாகச் செயல்பட்டது.

ஜுஹு விமான நிலையம் எங்கு உள்ளது?

ஜுஹு விமான நிலையம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், அரபிக்கடல் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. தற்போதைய சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, இதுதான் மும்பையின் முக்கிய விமான நிலையமாக இருந்தது.

முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டவர் யார்?

1932-ல், ஜே.ஆர்.டி. டாடா, இந்தியாவின் முதல் வணிக விமானத்தை கராச்சியிலிருந்து மும்பைக்கு இயக்கி, ஜூஹு விமான நிலையத்தில் தரையிறக்கினார், ஏனெனில் அவர் விமானம் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம், பிற்காலத்தில் ஏர் இந்தியாவாக மாறிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்கமாக இருந்தது.

ஜுஹு விமான நிலையம் ஏன் உருவாக்கப்பட்டது?

இந்த விமான நிலையம் ஆரம்பத்தில் விமானப் பராமரிப்பு, விமான க்ளப் மற்றும் சிறிய ரக விமானங்களின் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் விமானப் போக்குவரத்து அப்போது இந்தியாவிற்கு மிகவும் புதியதாக இருந்ததால் இது விரைவிலேயே ஆரம்பகால இந்திய விமானிகள் மற்றும் அஞ்சல் விமானங்களுக்கான ஒரு முக்கிய மையமாக மாறியது.

இப்போதும் விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளதா?

இப்போதும் இந்த விமான நிலையம் பயன்பாட்டில்தான் உள்ளது, ஆனால் தற்போது இது ஹெலிகாப்டர் சேவைகள், சிறிய ரக விமானங்கள் மற்றும் விமானி பயிற்சிப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் வணிகரீதியான விமான சேவைகள் 1948-இல் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன.

Desktop Bottom Promotion