Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
காலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா? இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்
இயற்கையாகவே ஜீரணசக்தியை அதிகரிக்கும் முறைகளை இங்கே விளக்கமாகக் கொடுத்துள்ளோம். அதற்கான நம்முடைய உணவுப்ப பழக்கத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றிய தொகுப்பு இது.
சாப்பிடுற விட கஷ்டமான விஷயம் அது நன்றாக ஜீரணிப்பது. ஜீரண சக்தி ஒழுங்காக இருந்தாலே போதும் நம் உடலுறுப்புகள் சீராக இயங்க ஆரம்பித்து விடும். ஏனெனில் சீரண செயல் மூலம் தான் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவிலிருந்து பெற முடியும். சில பேருக்கு என்ன சாப்பிட்டாலும் சீரணிச்சு விடும்.
சில பேர் சாப்பிட்டா சீரணிக்குமா என்ற சந்தேகத்தில் சரியா சாப்பிடக் கூட மாட்டார்கள். இந்த சீரண பிரச்சனை மலச்சிக்கல், உடல் ஆற்றல் குறைதல், குடல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, வயிறு மந்தம், வயிற்றெரிச்சல், வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடும். இதனால் ஒட்டுமொத்த குடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் கெடக் கூடும்.

எடை அதிகரிக்கும்
அதுமட்டுமல்லாமல் இந்த சீரண பிரச்சனை உடல் எடையை கூட அதிகரிக்க ஆரம்பித்து விடும். உடல் எடை அதிகரிக்கும் போது எல்லா வித நோய்களும் கூட நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இதை கண்டுக் கொள்ளாமல் விடக் கூடாது. சோடா போன்ற பானங்களை நீங்கள் பயன்படுத்தினாலும் இந்த சீரண பிரச்சினையை சரி செய்ய இந்த 5 இயற்கை வழிகளை கையில் எடுத்தால் போதும். எளிதாக சரி செய்து விடலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

நார்ச்சத்து அடங்கிய உணவுகள்
காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆப்பிள், ப்ளம்ஸ், கீரைகள், ஓட்ஸ், நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் குடலியக்கத்திற்கு உதவும். மலச்சிக்கலை போக்கும். சீரண சக்தியை மேம்படுத்தும்.

நன்றாக மென்று சாப்பிடுங்கள்
அவசர அவசரமாக உணவை விழுங்காதீர்கள். நன்றாக உணவை வாயில் வைத்து பற்களால் மென்று சாப்பிடுங்கள். இப்படி உணவு அரைபடும் போது இரைப்பைக்கு வேலை எளிதாக இருக்கும். இதனால் எளிதாக உணவை அரைத்து சீரணித்து விடும். இந்த முறை உங்கள் உணவு எளிதாக சீரணிக்க உதவும். மலம் சுலபமாக வெளியேறும்.

நீர்ச்சத்து
நீர்ச்சத்து உங்கள் உடலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும். எனவே அதிக நீர் அருந்தி வரும் போது நச்சுக்களை எளிதாக வெளியேற்றுகிறது. இது மலம் கழித்தலை சுலபமாக்குகிறது. இஞ்சி டீ அல்லது நெல்லிக்காய் டீ போட்டு குடியுங்கள். மலச்சிக்கல் தீரும்.

புரோபயோடிக் உணவுகள்
புரோபயோடிக் உணவுகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை பெருக்குகிறது. இதனால் சீரண சக்தி மேம்பட்டு உடல் எடை வெகுவாக குறையும். எனவே உணவில் அடிக்கடி தயிர் சேர்த்து கொள்ளுங்கள்.

நேர நேரத்துக்கு சாப்பிடுங்கள்
சரியான நேரம் சாப்பிடுவது மிகவும் முக்கியம். நேர நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல் இருந்தால் சீரண பிரச்சனை ஏற்படும். எனவே மூன்று வேளையும் சரியாக சாப்பிடுங்கள். நேரம் தவறி சாப்பிடாதீர்கள். இதனால் உங்கள் உடல் மெட்டா பாலிசம் மாற்றப்பட்டு வெயிட் போட ஆரம்பித்து விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நாள் சாப்பிடுகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்காவது அதே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதைப் பின்பற்றி வாருங்கள்.
மேற்கண்ட முறைகள் மூலம் உங்கள் சீரண சக்தியை மேம்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே.



Click it and Unblock the Notifications