இந்த காரணங்கள்தான் இளம்வயதில் மரணம் உண்டாக காரணமாம்!!

மரணம் யாருக்கும் எப்போதும் வரும் என்று தெரியாது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை, எந்த வித கெட பழக்கமும் இல்லை. இருப்பினும் சிலருக்கு மரணம் விரைவில் வந்துவிடும்.

மரணம் யாருக்கும் எப்போதும் வரும் என்று தெரியாது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை, எந்த வித கெட பழக்கமும் இல்லை. இருப்பினும் சிலருக்கு மரணம் விரைவில் வந்துவிடும்.

இன்னும் சிலர் அவர்களின் தவறான வாழ்க்கை முறையினால் மரணத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள். எது எப்படியோ இங்கே கீழே சொல்லப்பட்டிருக்கும் காரணங்களை நீங்கள் முன்னெச்செரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு சொல்லப்பட்டிருக்கும் அறிகுறிகள் இளமையில் மரணம் உண்டாவதற்கான காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் தாத்தா பாட்டி இறந்தது எப்போது ?

உங்கள் தாத்தா பாட்டி இறந்தது எப்போது ?

பொதுவாக நமது ஆயுள்காலங்கள் 75%, மரபணுக்களிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. உங்கள் தாத்தா பாட்டி 80 வயது வரை வாழ்ந்திருந்தால் உங்களுக்கும் அந்த ஆயுள் வரை இருக்கும். ஆனால் அந்த மரபணுக்களை மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் வாழும் வாழ்க்கையிலும் உள்ளது.

மனதை பிஸியாக வைத்திருக்கவில்லையா?

மனதை பிஸியாக வைத்திருக்கவில்லையா?

கலிஃபோனியா பல்கலைக் கழகத்தில் , நீங்கள் எப்போதும் உடலையில் மனதையும் பிஸியாக வைத்திருந்தால் உங்களை மரணம் நெருங்காது என்று கூறுகின்றனர். உங்களது வேலைப்பளு உங்களை உத்வேகத்துடன் இயக்க வைப்பதால், மரணம் எளிதில் உங்களை அடையாது என்கின்றனர்.

நாள் முழுதும் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களா?

நாள் முழுதும் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களா?

அலுவலக வேலையென்றாலும் சரி, வீட்டில் சும்மா அமர்ந்து டிவி பார்த்தாலும் சரி இரண்டுமே நமது ஆயுளை குறைக்குமாம். தொடர்ந்து 10 மணி நேரம் அமர்ந்தபடி இருந்தால் டிஎன்ஏ வை பாதுகாக்கும் டெலோமெர் என்ற உறை குறைய ஆரம்பிக்குமாம். டெலோமேர் குறைய குறைய நமது ஆயுள் குறையும்.

மெதுவா நடக்கிறீங்களா?

மெதுவா நடக்கிறீங்களா?

எப்போதும் உங்களால் வேகமாக நடக்க முடியவில்லையா? இதுவும் ஒரு அறிகுறி. இது உங்கள் உடல் தசைகளில் இயக்கம் இல்லாததை காட்டுகிறது. இதனால் இதயம், நுரையீரல் ஆகியவை ஆரோக்கியமாக இல்லை என்பதன் அறிகுறிகளாம்.

 உங்களால் குறைந்த பாரத்தையும் தூக்க முடியவில்லையா?

உங்களால் குறைந்த பாரத்தையும் தூக்க முடியவில்லையா?

கடைகளில் வாங்கும் மளிகை சாமான்களையும் தூக்க முடியாமல் இருந்தால் அவை விரைவில் மரணம் வருவதற்கான அறிகுறிகள்.

பலமில்லாத கால் எலும்புகள், அதிகக் கொழுப்பு குறிப்பக வயிற்றுப் பகுதியில் இருக்கிறது என அர்த்தம்.

உங்களுடைய விருப்பமான நொறுக்குத்தீனி எது ?

உங்களுடைய விருப்பமான நொறுக்குத்தீனி எது ?

பாக்கெட்டுகளில், விற்கப்படும் பெரும்பாலான நொறுக்குத் தீனிகள் உங்கள் மரபனுக்களை மாற்றும் சக்தி கொண்டது. எனவே இவற்றை எப்போதும் சாப்பிடுபவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு விரைவில் மரணம் வரலாம் என்று கூறுகின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 2, 2017, 9:00 [IST]
Desktop Bottom Promotion