Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உறக்கம் மற்றும் கனவுகள், நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய 4 உண்மைகள்!
உறக்கத்தை பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்!
நிம்மதியான உறக்கத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது. ஒருவரது உறக்கம் பாதிக்கப்பட்டால், உடலின் ஆரோக்கியம், உடல் உறுப்புகளின் செயற்திறன் என அனைத்தும் பாதிக்கப்படும்.
உடல்நலம் மட்டுமல்ல, மன நலமும் தான். சரியாக உறங்காமல், ஓரிரு மாதங்கள் வேலை செய்தால் நிச்சயம் உங்களுக்கு மனநல பாதிப்புகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.
உறக்கம் என்பது எல்லா உயிர்களுக்கும் அத்தியாவசியம். ஆனால், மனிதர்கள் ஹார்ட் வர்கிங் என்ற பெயரில் உறக்கத்தை தொலைத்து வருகிறார்கள்...

பூனை தூக்கம்!
கேட் நேப் எனப்படுவது பூனை உறக்கம் என்பதாகும். அதாவது கண்களை திறந்துக் கொண்டே தூங்குவது. இது மனிதர்கள் மத்தியிலும் இருக்கிறது. இப்படி தூங்குவதை மனிதர்களே அறிய மாட்டார்கள்.
எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அப்படியே உறங்கிஇருப்பீர்கள். அதில் இருந்து வெளிவந்த பிறகு தான், உறங்கியதை உணர்ந்திருப்பீர்கள்.

கனவு!
உறக்கத்தின் ஆழ்ந்த நிலையான ரேபிட் ஐ மூவ்மென்ட் என்ற ஸ்டேஜில் தான் கனவுகள் வரும். பெரும்பாலான கனவுகள் பொருளற்றதாக தான் இருக்கும்.
இதற்கு காரணம், கனவு என்பது உங்கள் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் எண்ணங்கள், ஆசைகள், அந்நாளில் நடந்த, நீங்கள் கடந்து வந்த சூழல் மற்றும் நிகழ்வுகளின் கலப்பு.
ஆகையால்,ஏதேனும் கனவு வந்தால், அதை எண்ணி, எண்ணி குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறட்டை!
குறட்டை விடாத மனிதர்களே இருக்க முடியாது. ஏன், விலங்குகள் கூட குறட்டைவிடும். பலரது குறட்டை மிக குறைவான சப்தத்துடன் இருக்கும். இதனால், அவர்கள் குறட்டை விடுவதை நாம் அறிய முடியாது. இதை மைல்ட் ஸ்நோரிங் என கூறுகிறார்கள்.

ஸ்லீப்பிங் சைக்கிள்!
விலங்குகளும் கனவு காணுமா என்பதை நாம் அறிந்ததில்லை. ஆனால், மனிதனை போலவே மற்ற உயிரினங்களுக்கும் ஸ்லீப்பிங் சைக்கிள் இருக்கிறது.
யானைகள் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் குணாதிசயம் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications











