Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
நீங்கள் அறியாத அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெண்சங்கின் மகத்துவங்கள் !!
வெண்சங்கின் மகத்துவமும், அவை மருத்துவ உலகத்தில் பயன்படுத்தும் முறையும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
சங்கு ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மனிதர்களின் நல்வாழ்வுக்கும் பயன் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினத்தின் மேல் ஓடு, என்பது நாம் அறிவோம்தானே.சங்கினில் நிறைய வகைகள் இருந்தாலும், ஆன்மீகத்தில் வலம்புரிச்சங்கு உயர்வாகவும், மனிதர்களின் பயன்பாட்டில் வெண்சங்கு, மருத்துவரீதியாக உயர்வாகவும் கருதப்படுகிறது.

கடலின் அடிப்பகுதிகளில் சங்குப்படுகைகள் எனும் இடத்தில் கூட்டமாக வாழும் சங்கினம், கடலோரப்பாறைகளை ஒட்டிய மணற்பகுதிகளிலும் வாழும் தன்மைமிக்கவை. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, பூம்புகார், இராமேஸ்வரம், கன்யாகுமரி மற்றும் நமது நாட்டின் பிற கடற்கரையோரப்பகுதிகளில், அதிகம் கிடைக்கின்றன. வெண்சங்கு குறிப்பாக மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையில் அதன் நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

சங்கின் மருத்துவ குணங்கள்
கைக்குழந்தைகளுக்கு சங்கில் இட்டு மருந்தைப்புகட்ட, மருந்தை வெளியே கக்காமல் குழந்தைகள் சாப்பிட்டு உடல்நலமாகும் என்பது, பாரம்பரியமாக முன்னோர் கடைபிடித்துவந்த ஒரு மரபு.

வாத நோய்க்கு- சங்கு பற்பம் !!
சங்குடன் தாமரைஇலைகள் சேர்த்து உருவாகும் சங்கு பற்பத்தை, தேன், சோறு வடித்த கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டுவர, நாள்பட்ட விக்கல்,தும்மல்,ஜுரம், பித்தம் மற்றும் வாத சம்பந்தமான வியாதிகள் தீரும். தசைப்பிடிப்பும் சரியாகும். தொடர்ந்து சாப்பிட்டுவர, கண் வியாதிகள் நீங்கும்.

வெண் குஷ்டத்திற்கு-சங்கு செந்தூரம்!1
சங்குடன் சோற்றுக்கற்றாழை உள்ளிட்ட சில மூலிகைகளைச்சேர்த்து இடித்து, சித்த மருத்துவ முறையில் பதப்படுத்தப்பட்ட பொடியே, சங்கு செந்தூரம் எனப்படும்.
சங்கு செந்தூரம், வெண்குஷ்டம் எனும் சரும நோய்க்கு அருமருந்தாகும். சங்கு செந்தூரத்தை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தினமும் சாப்பிட்டுவர, மன உளைச்சலைத் தந்துவந்த வெண்குஷ்டம் விரைவில், மறையும்.

ஆஸ்துமா :
T.B வியாதி, ஆஸ்துமா மற்றும் வயிறு,கண் போன்ற பாதிப்புகளை நீக்க, தூளாக்கிய சங்கு சுண்ணாம்பு பயனாகிறது. சங்கு சுண்ணாம்பு, விஷக்கடியை குணமாக்கும் மருந்தாகிறது.

கண்கட்டி :
தண்ணீர்விட்டு கறிவேப்பிலை சேர்த்து சங்கை இழைத்து, அத்துடன் தாய்ப்பாலை கலந்து, பரு,கண்கட்டிகள் மீது தடவிவர, அவை குணமாகும். அல்லது சங்கு மாத்திரை பயன்படுத்தலாம்.

சங்கின் இதர பயன்பாடுகள்.
பெண்களின் ஆபரணங்களாக சங்கு வளையல்கள், சங்கு மோதிரம் உள்ளிட்ட அணிகலன்கள் செய்யும் தயாரிப்பில் பயனாகின்றன.
சில குடும்பங்களில், மரணமடையும் நிலையிலுள்ள வயதானவர்களுக்கு சங்கில் பால் இட்டு வாயில் செலுத்த, அவர்களுக்கு இம்மையில் இருந்த துன்பங்கள் நீங்கி, மறுமையில் சிறந்த இறைவாழ்க்கை கிடைக்கும் எனற நம்பிக்கை உண்டு.



Click it and Unblock the Notifications











