Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியது என்ன?
நம் உடலில் கிருமிகள் வந்துவிட்டால், நம் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அடையாளம் கண்டு, அவர்களை எதிர்த்து போராடும். அப்போது உடல் வெளியிடும் வெப்பமே காய்ச்சல்.
காய்ச்சல் வந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று என்ன மாதிரியான காய்ச்சல் என தெரிந்து கொள்ளுங்கள்.
சாதரண வைரஸ் காய்ச்சலாக இருந்தால், வீட்டிலேயே எவ்வாறு கிருமிகளை விரட்டி காய்ச்சலை சரிபண்ணலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

நீர் அதிகம் குடிக்க வேண்டும் :
பொதுவாய் காய்ச்சல் வந்தால், நிறைய பேர் நீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். குளிர் ஜுரம் வந்துவிடும் என பயப்படுவார்கள். அது தவறு. காய்ச்சல் வந்தால், உடலில் அதிகப்படியான வெப்பம் இருக்கும். அதனை தணிக்க, நீர் அருந்த வேண்டும். இத்னால் வெப்பம் மூளையை பாதிக்காமல் இருக்கும்.
திரவ உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் :
காய்ச்சலின் போது ஜீரண உறுப்புக்கள் மிக மெதுவாகதான் வேலை செய்யும். ஆகவே நிறைய திட உணவுகளை உண்ணுவதை தவிர்த்து, கஞ்சி பழச் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எளிதில் ஜீரணமாகக் கூடிய திட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்த்துவது காய்ச்சலை அதிகரிக்கச் செய்யும்.
மிளகுத்தூள், 2 பல் பூண்டு, தேன் ஆகியவற்றை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், கிருமிகள் வேகமாய் அழியும். அதேபோல் மிளகு, திப்பிலி, சுக்கு சமஅளவு போடி செய்து தேனில் சாப்பிட குணமாகும்.
வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரினை குடித்தாலும் காய்ச்சல் விரைவில் சரியாகும்.
துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து கால் லிட்டர் அளவு சுண்டியபின் வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
சளி காய்ச்சலால் அவதிப்பட்டால், நிலவேம்பு பொடியினை இரு டம்ளார் அளவு நீரில் போட்டு, ஒரு டம்ளார் அளவு சுண்ட வைத்து அதனை குடித்தால், கபம் இளகும்.
துளசி இலைச்சாறு இஞ்சி சாறு சம பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வாணிலியில் வறுத்து, பின் கால் லிட்டர் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நீர் ஒரு டம்ளர் அளவு வற்றிய பின் ஆற வைத்து குடித்தால், எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.
ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் ,வாரக்கணக்கில் நீடித்து வரும் காய்ச்சலும் குணமாகும்.
நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சல் இருந்தால், சிறிது மிளகைத் தட்டி அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குளிர் காய்ச்சல் விடுபடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

















