Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
காரமான உணவு சாப்பிட்டு வாய் ரொம்ப எரியுதா? இதில் ஒன்றை சாப்பிடுங்க உடனே எரிச்சல் சரியாகிரும்...!
பரவலாக சிலருக்கு கார உணவுகளின் மீது ஒரு அலாதி பிரியம் உண்டு. ஆனால் சாப்பிட்ட பின், காரமான உணவுகளால் ஏற்படும் உணர்வு மற்றும் விறுவிறுப்பான சுவைகள், வாயின் உதடுகள், நாக்கு மற்றும் மேல் அன்னம் என அனைத்து பகுதிகளிலும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
மிளகாயின் விதையால் ஏற்படும் காரம் அல்லது மசாலா பொருட்களால் ஏற்படும் காரம் என எதுவாக இருந்தாலும் அவை கார உணர்வை ஏற்படுத்தி சுவையின் இசையை உருவாக்குகின்றன.

உனடியான உணர்வுக்கு பின், கார உணவுகள் எண்டோர்பின்களை வெளியிட்டு ஒரு அவசரத்தைத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. காரமான உணவுகளை உண்பதால் அடிக்கடி வயிற்று வலியும் வாயில் எரிச்சலும் ஏற்படும்.
இந்த எரியும் உணர்வு அதிகமாகும்போது, அது தாங்கி கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அதைச் சரி செய்ய அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்போம், ஆனால் அது சரியான உணர்வை ஏற்படுத்தாது. நீங்கள் காரமான உணவுகளை சாப்பிடும்போது இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பால் பொருட்கள்
காரமான உணவுகளால் மிகவும் தீவிரமான எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய பால் அல்லது பால் பொருட்களை சாப்பிடலாம். இது உங்களுக்கு ஏற்படும் எரிச்சல் உணர்வை சரி செய்ய உதவும்.
அதற்கு காரணம், பாலில் கேசீன் என்ற புரதம் உள்ளது, இது பாலுக்கு வெள்ளை நிறத்தை அளிக்கிறது. 80 சதவீத பசுவின் பாலில் கேசீன் எனப்படும் புரதம் அதிகம் உள்ளது.
இது தயிர், பாலாடைக்கட்டி போன்ற பல்வேறு உணவுகளிலும் காணப்படுகிறது. எரியும் உணர்வைத் தணிக்க, பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட தயிர் மற்றும் பாலாடைக்கட்டி சாப்பிட்டால் சிறந்த பலனைக் கொடுக்கும்.
எலுமிச்சைச்சாறு
காரமான உணவுகளால் வாயில் எரியும் உணர்வைக் குறைக்க நீங்கள் எலுமிச்சைப் பழத்தை உட்கொள்ளலாம். பால் அல்லது பால் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எலுமிச்சை நீர் அமிலத்தன்மை கொண்டது, இது காரத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. எலுமிச்சை நீரை தவிர, நீங்கள் ஆரஞ்சு சாறு, தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை குடிக்கலாம்.
ஐஸ்கட்டி
நிபுணர்கள் காரமான உணவால் வாயில் ஏற்படும் எரியும் உணர்வு குறைக்க, தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறுகிறார்கள். இதனால் வாய் எரியும் தன்மை குறையாது. அதற்குப் பதிலாக, ஒரு துண்டு ஐஸ் வாயில் வைக்கலாம். ஐஸ்கட்டியின் குளிர்ச்சியானது எரியும் உணர்வைக் குறைக்க உடனடியாக உதவுகிறது. படிப்படியாக, வாயில் எரியும் உணர்வு விரைவில் முடிவடைகிறது.
பிரட்
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு துண்டு பிரட் சாப்பிடுவது, காரமான உணவுகளால் ஏற்படும் கூர்மை அல்லது காரத்தால் உற்பத்தி செய்யப்படும் உமிழ்நீரை உறிஞ்சிவிடும். இதன்மூலம் படிப்படியாக காரத்தன்மை குறைந்து, வாயில் எரியும் உணர்வும் குறையத் தொடங்கும்.
தேன்
இது ஒரு எளிய வீட்டு வைத்தியம், இது காரத்தை போக்க பயன்படுகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் 1 தேக்கரண்டி தேனை கலக்கவும்.
தாங்கிக்கொள்ள முடியாத காரமான உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் போதெல்லாம், இந்த தேன் தண்ணீரை உட்கொள்ளுங்கள். இது நாக்கில் ஒரு எளிய அடுக்கை ஏற்படுத்துகிறது, இது காரமான தன்மையை அமைதிப்படுத்துகிறது மற்றும் வாயில் எரியும் உணர்வைக் குறைக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
