Latest Updates
-
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2.0 படத்தில் வருவது போல உங்கள் மூளையையும் படு வேகமாக செயல்பட வைக்கணுமா..?
மூளை- மனித பிறப்பின் மிக முக்கிய அங்கம் இந்த மூளை தான். அதுவும் மற்ற உயிரினத்தின் மூளையை விட மனிதனின் மூளைக்கு பல மடங்கு ஆற்றல் அதிகம். ஆறு அறிவு கொண்டதாலே மனித மூளைக்கு இவ்வளவு பெருமைகள் உள்ளது. மனித மூளையை மிஞ்ச இங்கு இன்னும் அந்த அளவுக்கு விஞ்ஞானம் வரவில்லை. ஆனால், மனித மூளையால் அதையும் சாதித்து காட்ட முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

பொதுவாகவே நம்மில் பலர் மூளையின் திறனை சரிவர பயன்படுத்துவது கிடையாது. ஐன்ஸ்டீன் போன்ற மிக பெரிய விஞ்ஞானிகள் கூட மூளையை வெறும் 5% மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். இப்படி மூளையை படு வேகமாக செயல்படுத்த வேண்டுமென்றால் அதற்கும் தீர்வு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பதிவில் கூறும் குறிப்புகள் நன்கு உதவும். வாங்க, மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும் இயற்கை முறைகளை பார்ப்போம்.

மூளைக்கு வேலை..!
இன்று மனிதனின் அறிவை பயன்படுத்தி பல்வேறு தொழிற்நுட்பங்கள் வந்துள்ளன. இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு மனிதன் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு மனிதனை விட பலமடங்கு ஆற்றல்மிக்கது. உங்கள் மூளையும் இந்த அளவிற்கு செயல்பட வேண்டுமா..? அப்போ இந்த இயற்கை முறைகள் போதும்.

ஜின்செங்
மூலிகைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது இந்த ஜின்செங் மூலிகை. இதனை ஆய்வு செய்ததில் இதிலுள்ள மருத்துவ குணம் இந்த உலகிற்கு தெரிய வந்துள்ளது. மூளையின் ஆற்றலை பல மடங்கு அதிகரித்து புத்தி கூர்மையை தரும். மேலும், ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் தன்மை இந்த மூலிகைக்கு உள்ளது.

ஜாதிபத்திரி
இந்த மூலிகை அதிக மருத்துவ குணங்களை கொண்டது. புத்தி கூர்மையை அதிகரிக்கும் தன்மை இதற்குள்ளது. உங்களின் மூளை திறனை அதிகரிக்க இந்த ஜாதிபத்திரியின் இலைகள் பயன்படும். அதிக ஞாபக மறதி உள்ளவர்களுக்கு இந்த ஜாதிபத்திரி சிறந்த தீர்வு. இதனை சூப், தக்காளி சாஸ், வறுத்த சிக்கன் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

அஸ்வகந்தா
ஆயுர்வேதத்தின் மிக முக்கிய இடம் இந்த அஸ்வகந்தாவிற்கு உள்ளது. மூளையின் செயல்திறனை பலமடங்காக உயர்த்த இந்த மூலிகை உதவுகிறது. இதனை லேகியம் போன்றோ அல்லது பொடி செய்து தேனின் கலந்தோ சாப்பிடலாம். இப்படி செய்தால் இதன் பலன் அப்படியே கிடைக்கும்.

வல்லாரை
பலருக்கு இந்த மூளையின் மகத்துவம் பற்றி தெரியும். ஆயுர்வேத மருத்துவத்தின் மிக முக்கிய பங்கு இந்த வல்லாரைக்கு உள்ளது. மூளைக்கு அதிக வேலையை செய்ய கூடிய தன்மையை இது உண்டாக்கும். இவை ஹார்மோனை சீரான அளவு சுரக்க வைத்து மன அழுத்தத்தையும் குறைக்கும். வல்லாரை உங்களின் மூளைக்கு சிறந்த நண்பன்.

ரோஸ்மேரி
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்த இந்த மூலிகை செடியின் பயன்கள் ஏராளம். நரம்புகளை வலிமையாக்கி மூளை செல்களை சேதம் அடையாமல் பார்த்து கொள்ள இந்த ரோஸ்மேரி பயன்படும். மூளை பகுதியில் ஏற்படுகின்ற வீக்கத்தையும் இந்த ரோஸ்மேரி குணப்படுத்த வல்லது.

தைம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இந்த தைம் செடியில் உள்ளது. அதனால் தான் மூளையின் ஆரோக்கியத்தை இந்த மூலிகை பாதுகாக்கிறது. மேலும், இதிலுள்ள DHA அமிலம் வயதான காலத்தில் வர கூடிய ஞாபக மறதியையும் இது குணப்படுத்த கூடியதாம்.

சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தி ஒரு சிறந்த மூலிகையாகும். இதிலுள்ள லூட்டியலின் என்கிற மூல பொருள் அதிக ஆற்றலை கொண்டது. மூளையின் செயல்திறனை அதிகரிக்க கூடிய தன்மை இதற்குள்ளது. எனவே, இதனை டீ போன்று தினமும் தயாரித்து குடித்தால் இதன் பலன் அதிகம் கிடைக்கும்.

பூண்டு
சமையல் அறையின் முக்கிய மூலிகை இந்த பூண்டு. மூளைக்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்ற நியூரோன்ஸை பாதிக்கப்படாமல் வைத்து கொள்ள இந்த பூண்டு பயன்படுகின்றது. அத்துடன் மன அழுத்தத்தையும் இது குறைத்து மகிழ்ச்சியினை சூழலை உங்களுக்கு இது தருமாம்.

புதினா
பிரியாணி போன்ற உணவுகளில் மிக முக்கிய பங்கு இந்த பதினாவிற்கு உள்ளது. உங்களை என்றுமே சுறுப்பாக வைத்து கொள்ளும் திறன் இதற்குள்ளதாம். புது புது யோசனைகளை தர கூடிய ஆற்றல் இந்த புதினாவில் இருக்கிறது. இதனை உணவில் சேர்த்தோ அல்லது டீ போன்றோ பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications