Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சிறு நீர்தொற்றுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
சிறு நீர்தொற்றினை விரைவில் குணப்படுத்தும் ஒரு இயற்கை மூலிகை வைத்தியமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகித்து பயனடையுங்கள்.
சிறு நீர்த் தொற்று ஆண் பெண் இருபாலருக்குமே உண்டாகக் கூடிய தொற்று நோய். குறிப்பாக பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும். ஆண்களுக்கு அரிதாக என்றாலும் இதனால் தாங்க முடியாத வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.

சிறு நீரக உறுப்புக்களை சரிவர சுத்தம் செய்யாவிட்டால் அல்லது நீர் குறைவாக குடிக்கும்போது இந்த நிலை உண்டாகிறது. அதிக நீர் குடித்தாலே குணமாகிவிடும்.
ஆனால் தீவிர தொற்று இருந்தால் காய்ச்சல் உடல் சோர்வு மற்றும் எரிச்சல் உண்டாகும். இந்த சமயத்தில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஒரு மூலிகை வைத்தியத்தை உபயோகித்துப் பாருங்கள். சிறு நீர்த் தொற்று கட்டுப்படும்.

தாமரை இலை :
கிருமித் தொற்று, சுகாதார குறைவு மற்றும் அதிக உடல் சூட்டினால் தோன்றும் வெள்ளைப்படுதலை நீக்கும் அற்புத மூலிகை ஓரிலை தாமரை. இதன் இலைகள் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன.
இதன் இலைகளிலுள்ள பச்சையங்கள் மற்றும் ஈரப்பதம் குளிர்ச்சியை உண்டாக்கி, உணவுப்பாதை மற்றும் சிறுநீர்பாதை புண்களை ஆற்றுகின்றன.
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை நீக்குகின்றன.

செய்முறை :
5 இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். கால் லிட்டல் அளவிற்கு சுண்டியபின்பு வடிகட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
இந்த நீரை காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்தால் கிருமித் தொற்றுகள் நீங்கி, உடல் சூடு தணியும்.

செய்முறை :
ஓரிலை தாமரை, நீர்முள்ளித் தண்டு, வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :
5 கிராமளவு தினமும் 2 வேளை இளநீர் அல்லது மோருடன் கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தொல்லை நீங்கும்.
ஓரிலைத் தாமரை இலைச்சாறு, பாதாம்பிசின் பொடி இரண்டையும் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து குடித்து வர உடல் உஷ்ணம் குறைந்து, பல வகைப்பட்ட சிறுநீர் எரிச்சல் நீங்கும்.



Click it and Unblock the Notifications
