Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ரத்தக் கொதிப்பை குறைக்கும் ஒரு மூலிகை தேநீர்!! தயார்ச் செய்வது எப்படி?
செம்பருத்தி பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டது. உடலில் பல நோய்களை குணப்படுத்டுவதோடு நோய்கள் வராமலும் காக்கும். அவ்வகையில் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் தே நீர் தயாரிப்பதை பார்க்கலாம்.
உடலில் சோடியம் அளவு அதிகமாகும்போதும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகும்போதும் ரத்தத்தில் அழுத்தம் அதிகம் உண்டாகி உயர் ரத்த அழுத்தம் உண்டாகும்.

இதனால் முதலில் பாதிக்கப்படுவது இதயமும் அதன் பின் மூளையும். பக்கவாதம் கூட உண்டாகும். அகவே உணவில் உப்பு குறைவாக சாப்பிட வேண்டியது முக்கியம். அதுமட்டுமல்லாது சாப்பிடும் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளுதல் நல்லது. அவ்வகையில் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் மூலிகை மலர் பற்றி தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

செம்பருத்தியின் மருத்துவ பயன்கள் :
சித்த மருத்துவம் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இதனைக் கொண்டு தயாரிக்கும் தே நீர் பற்றியும் அதன் மகத்துவத்தைப் பற்றியும் பார்க்கலாம்

செம்பருத்தி தேநீர் :
நீர்- 4 கப்
செம்பருத்தி இதழ் காய்ந்தது - 3 ஸ்பூன்
செம்பருத்தி இதழ் புதிதானது - 2 ஸ்பூன்
சர்க்கரை -1 ஸ்பூன்
ஆரஞ்சு - 1
பட்டை - 1

தயாரிக்கும் முறை :
முதலில் நீரை கொதிக்க வையுங்கள். பின்னர் அதில் பட்டை மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும்.

தயாரிக்கும் முறை :
அதன் பின் வடிகட்டி அதில் சர்க்கரை மற்றும் ஒரு முழு ஆரஞ்சின் சாறை கலந்து சூடாகவோ அல்லது ஐஸ் போட்டோ குடிக்கவும்

பலன்கள் :
இந்த தேநீர் அதிக நீரை உடலிலிருந்து பிரித்தெடுக்கும். அதுபோலவே அதிலிருக்கும் ஆந்தோசயனின் ரத்தத்தில் இருக்கும் அடர்த்தியை குறைத்து அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. அதிக தாதுக்களை சிறு நீரகம் மூலமாக வெளியேற்றும்.



Click it and Unblock the Notifications











