Latest Updates
-
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்!
ரத்தக் கொதிப்பை குறைக்கும் ஒரு மூலிகை தேநீர்!! தயார்ச் செய்வது எப்படி?
செம்பருத்தி பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டது. உடலில் பல நோய்களை குணப்படுத்டுவதோடு நோய்கள் வராமலும் காக்கும். அவ்வகையில் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் தே நீர் தயாரிப்பதை பார்க்கலாம்.
உடலில் சோடியம் அளவு அதிகமாகும்போதும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகும்போதும் ரத்தத்தில் அழுத்தம் அதிகம் உண்டாகி உயர் ரத்த அழுத்தம் உண்டாகும்.

இதனால் முதலில் பாதிக்கப்படுவது இதயமும் அதன் பின் மூளையும். பக்கவாதம் கூட உண்டாகும். அகவே உணவில் உப்பு குறைவாக சாப்பிட வேண்டியது முக்கியம். அதுமட்டுமல்லாது சாப்பிடும் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளுதல் நல்லது. அவ்வகையில் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் மூலிகை மலர் பற்றி தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

செம்பருத்தியின் மருத்துவ பயன்கள் :
சித்த மருத்துவம் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இதனைக் கொண்டு தயாரிக்கும் தே நீர் பற்றியும் அதன் மகத்துவத்தைப் பற்றியும் பார்க்கலாம்

செம்பருத்தி தேநீர் :
நீர்- 4 கப்
செம்பருத்தி இதழ் காய்ந்தது - 3 ஸ்பூன்
செம்பருத்தி இதழ் புதிதானது - 2 ஸ்பூன்
சர்க்கரை -1 ஸ்பூன்
ஆரஞ்சு - 1
பட்டை - 1

தயாரிக்கும் முறை :
முதலில் நீரை கொதிக்க வையுங்கள். பின்னர் அதில் பட்டை மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும்.

தயாரிக்கும் முறை :
அதன் பின் வடிகட்டி அதில் சர்க்கரை மற்றும் ஒரு முழு ஆரஞ்சின் சாறை கலந்து சூடாகவோ அல்லது ஐஸ் போட்டோ குடிக்கவும்

பலன்கள் :
இந்த தேநீர் அதிக நீரை உடலிலிருந்து பிரித்தெடுக்கும். அதுபோலவே அதிலிருக்கும் ஆந்தோசயனின் ரத்தத்தில் இருக்கும் அடர்த்தியை குறைத்து அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. அதிக தாதுக்களை சிறு நீரகம் மூலமாக வெளியேற்றும்.



Click it and Unblock the Notifications