Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்க, இந்த பானத்தைக் குடிங்க...
இங்கு தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்கி இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், வாஸ்குலார் நோய்கள் போன்றவை வருவதற்கு பெருந்தமனி தடிப்புகள் தான் காரணம். பெருந்தமனி தடிப்பினால் இதய குழாய் கடினமாகி, சுருங்கிவிடும். இதன் காரணமாக இதயத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, பல இதய நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

பொதுவாக தமனி குழாய்களின் உட்பகுதி எண்டோதிலியம் என்னும் மெல்லிய படலத்தால் மூடப்பட்டிருக்கும். இந்த எண்டோதிலியம் தான் தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், புகைப்பிடித்தல் போன்றவற்றால் இந்த எண்டோதிலியம் பாதிக்கப்பட்டு, தமனிகளில் ப்ளேக்கை உருவாக்கி, இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.
இப்படி இதய குழாய்களில் ஏற்படும் அடைப்பால், இரத்த ஓட்டம் குறையும் போது, நெஞ்சு வலியை உண்டாக்குகிறது. தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்க பல்வேறு மருந்துகள் இருந்தாலும், அவற்றால் பக்கவிளைவுகளும் ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்கி இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுத்துள்ளது.

உலர் திராட்சை
உலர் திராட்சையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. அதோடு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியத்தின் அளவும் அதிகமாக உள்ளது. இச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியமானவைகளாகும்.

தேவையான பொருட்கள்:
உலர் திராட்சை - 1 கப்
துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
க்ரீன் டீ - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்

தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை அணைத்து, அதில் மற்ற பொருட்களை சேர்த்து, நன்கு கலக்க வேண்டும். பின்பு ஒரு உல்லன் துணியால் பாத்திரத்தை மூடி 8 மணிநேரம் ஊற வைத்தால், குடிப்பதற்கு பானம் தயார்.

பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் ஏதேனும் இரண்டு வேளை உணவு உண்பதற்கு முன் 150-200 மிலி குடிக்க வேண்டும்.

பானத்தின் இதர நன்மைகள்:
இந்த பானம் தமனிகளில் உள்ள அடைப்புக்களை நீக்கி சுத்தம் செய்வதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, எப்பேற்பட்ட தொற்றுக்களையும் எதிர்த்துப் போராடும். மேலும் இந்த பானம் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.



Click it and Unblock the Notifications
