Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்க, இந்த பானத்தைக் குடிங்க...
இங்கு தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்கி இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், வாஸ்குலார் நோய்கள் போன்றவை வருவதற்கு பெருந்தமனி தடிப்புகள் தான் காரணம். பெருந்தமனி தடிப்பினால் இதய குழாய் கடினமாகி, சுருங்கிவிடும். இதன் காரணமாக இதயத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, பல இதய நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.
பொதுவாக தமனி குழாய்களின் உட்பகுதி எண்டோதிலியம் என்னும் மெல்லிய படலத்தால் மூடப்பட்டிருக்கும். இந்த எண்டோதிலியம் தான் தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், புகைப்பிடித்தல் போன்றவற்றால் இந்த எண்டோதிலியம் பாதிக்கப்பட்டு, தமனிகளில் ப்ளேக்கை உருவாக்கி, இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.
இப்படி இதய குழாய்களில் ஏற்படும் அடைப்பால், இரத்த ஓட்டம் குறையும் போது, நெஞ்சு வலியை உண்டாக்குகிறது. தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்க பல்வேறு மருந்துகள் இருந்தாலும், அவற்றால் பக்கவிளைவுகளும் ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்கி இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுத்துள்ளது.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. அதோடு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியத்தின் அளவும் அதிகமாக உள்ளது. இச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியமானவைகளாகும்.
தேவையான பொருட்கள்:
உலர் திராட்சை - 1 கப்
துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
க்ரீன் டீ - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை அணைத்து, அதில் மற்ற பொருட்களை சேர்த்து, நன்கு கலக்க வேண்டும். பின்பு ஒரு உல்லன் துணியால் பாத்திரத்தை மூடி 8 மணிநேரம் ஊற வைத்தால், குடிப்பதற்கு பானம் தயார்.
பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் ஏதேனும் இரண்டு வேளை உணவு உண்பதற்கு முன் 150-200 மிலி குடிக்க வேண்டும்.
பானத்தின் இதர நன்மைகள்:
இந்த பானம் தமனிகளில் உள்ள அடைப்புக்களை நீக்கி சுத்தம் செய்வதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, எப்பேற்பட்ட தொற்றுக்களையும் எதிர்த்துப் போராடும். மேலும் இந்த பானம் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.