Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஹார்ட் அட்டாக்: உங்க அருகிலுள்ள யாருக்காவது மாரடைப்பு வந்தால் அவங்க உயிரை காப்பாத்த என்ன பண்ணனும் தெரியுமா?
இந்தியாவில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற தேர்வுகள் காரணமாக இதய நோய்களை உருவாக்குவது மிகவும் பொதுவானதாகிவிட்டது.
எனவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளையும், நம் அருகில் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற எதைத் தவிர்க்க வேண்டும், எதை செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க சிகிச்சை இல்லாததால், இதய தசை சேதம் காலப்போக்கில் அதிகரிக்கிறது. நீங்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகியிருந்தாலும் அல்லது மாரடைப்புக்கு ஆளான வேறு ஒருவருடன் இருந்தாலும், உடனடி நடவடிக்கை அவர்களின் உயிரைக் காப்பாற்றும்.

மாரடைப்பின் அறிகுறிகள்
மார்பு வலி
மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி. மாரடைப்பின் போது ஒருவர் வலி அல்லது அசௌகரியம், அழுத்துதல் அல்லது மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் வலி உணரலாம். இது சிறிது நேரம் நீடித்து மறைந்து பின்னர் மீண்டும் தோன்றலாம். இதயத் தசைகளுக்கு ரத்தம் செல்வதைத் தடுக்கும் அடைப்புதான் இந்த வலிக்குக் காரணம். மாரடைப்பு வலியை ஓய்வு குணப்படுத்தாது.
உடலின் மேல் பாகத்தில் வலி
மாரடைப்பின் போது வலி ஒன்று அல்லது இரண்டு கைகளிலும் உணரப்படலாம், இது தோள்பட்டை வரை கூட பரவுகிறது. கழுத்து, முதுகு, பற்கள் அல்லது தாடை போன்ற பகுதிகளிலும் வலி ஏற்படலாம்.
மூச்சுவிடுவதில் சிரமம்
மாரடைப்பின் போது ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம்ஏற்படலாம், இது மார்பு அசௌகரியத்துடன் அல்லது வலி இல்லமாலும் நிகழலாம்.
அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரத்தன்மை நபருக்கு நபர் வேறுபடலாம் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மேலே கூறப்பட்ட அறிகுறிகளைத் தவிர, பெண்கள் குமட்டல், வாந்தி, அசாதாரண சோர்வு, தூக்கக் கலக்கம் மற்றும் குடலில் அசௌகரியம் போன்ற அசாதாரண அறிகுறிகளை உணரலாம். மாரடைப்பு சில சமயங்களில் இரைப்பை அழற்சியின் அறிகுறிகளைப் பிரதிபலிக்கும்.
அருகில் ஒருவருக்கு மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
* உங்கள் அருகில் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் நீங்கள் உடனடியாக ஒரு ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும் மற்றும் நோயாளிக்கு விரைவில் மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
* பதட்டத்தில், பாதிக்கப்பட்ட நபரை உட்காரவோ படுக்கவோ வைக்க வேண்டாம். அவர்களின் ஆடைகளைத் தளர்த்தவும், மருந்துகளைத் தவிர வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கொடுக்க வேண்டாம்.
* யாராவது அதிகமாக சுவாசிப்பதாக நீங்கள் சந்தேகித்தால் நீங்கள் அவர்களின் நாடித்துடிப்பை சரிபார்க்க வேண்டும். அவர்கள் மார்பின் மேல் உங்கள் காதை வைத்து அவர்களின் இதயத் துடிப்பைக் கேளுங்கள். நாடித் துடிப்பையோ அல்லது சுவாசமோ இல்லையென்றால், நீங்கள் நோயாளிக்கு CPR கொடுக்க வேண்டியிருக்கும்.
* நோயாளிக்கு ஆஸ்பிரின் அல்லது ஜிடிஎன் (நைட்ரேட்ஸ்-வாசோடைலேட்டர்) ஒவ்வாமை இல்லை என்றால் கொடுக்கலாம். ஆஸ்பிரின் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது மற்றும் சாத்தியமான இரத்தக் கட்டிகளின் அளவைக் குறைக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

