Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
கொரோனா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்...
கொரோனா போன்ற கொடிய தொற்றுநோய் ஒருவரைத் தொற்றினால், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தான், விரைவில் அதிலிருந்து மீள முடியும்.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடமாகப் போகிறது. இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாம் கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டோம். இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் கொரோனாவில் இருந்தும் பலர் மீண்டு வருகின்றனர். இப்படி கொரோனா வைரஸ் தாக்கியும் ஒருவரால் அதில் இருந்து மீள முடிகிறது என்றால், அதற்கு ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி தான் காரணம்.

பொதுவாக உடல்நிலை சரியில்லாத போது நாம் வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிட விரும்புவோம். ஆனால் வாய்க்கு ருசியாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால், அது நிலைமையை மோசமாக்கக்கூடும். குறிப்பாக கொரோனா போன்ற கொடிய தொற்றுநோய் ஒருவரைத் தொற்றினால், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தான், விரைவில் அதிலிருந்து மீள முடியும்.

சிடிசி-யின் கூற்று
நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் டி, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் மீள முடியும். அதிலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், மேற்கூறிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
கீழே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விரைவில் மீள்வதற்கு சாப்பிடக்கூடாத உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உணவுகள் உடலினுள் வீக்கத்தை ஊக்குவிப்பதுடன், குணப்படுத்தும் செயல்பாட்டிலும் இடையூறை உண்டாக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளவர்கள், சோடியம், சர்க்கரை மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் நிறைந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் வீக்கத்தை உண்டாக்கி, விரைவில் நோயிலிருந்து மீள விடாமல் தடுக்கும். உடலினுள் வீக்கம் அதிகமானால், நோயெதிர்ப்பு மண்டலத்தில் அழுத்தம் அதிகரித்து, நோயில் இருந்து சீக்கிரம் குணமாக முடியாமல் செய்விடும்.
ஆகவே உருளைக்கிழங்கு சிப்ஸ், பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றில் சோடியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

மாட்டிறைச்சி
உங்களுக்கு கொரோனா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாட்டிறைச்சியை அடிக்கடி சாப்பிடாதீர்கள். இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளதால், இது வீக்கத்தை ஊக்குவிக்கும். வேண்டுமானால், இதற்கு மாறாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடலாம். இத்தகைய மோனோசாச்சுரேட்டட் கொழுப்பானது அவகேடோ, ஆலிவ் ஆயில், மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது. புரோடீன் சத்து வேண்டுமானால், மீனுக்கு பதிலாக பீன்ஸ் மற்றும் பருப்பு போன்ற தாவர வகை புரோட்டீன்களை உட்கொள்ளலாம்.

வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகளவில் இருக்கும். இந்த உணவுகள் உடலுக்கு நாம் நினைத்திராத அளவில் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் அதிக அழுத்தத்தைத் தரக்கூடியது. மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அடக்கவும் செய்கின்றன. அதோடு இந்த உணவுகள் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய மோசமான கொழுப்புக்களின் அளவையும் அதிகரிக்கின்றன.

சர்க்கரை பானங்கள்
பொதுவாக சர்க்கரை உடலில் வீக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒரு மோசமான பொருள். இத்தகைய சர்க்கரையை கொரோனா உள்ளவர்கள் அறவே தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சோடா பானங்கள், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றிற்கு 'குட்-பை' சொல்லிவிடுங்கள்.

காரமான உணவுகள்
சளி, இருமல் அல்லது காய்ச்சலின் போது, நல்ல காரமான உணவுகளை சாப்பிடத் தோன்றும். ஆனால் இந்த வகை உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் காரமான உணவுகள், தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, இருமலை மேலும் மோசமாக்கும். உங்களுக்கு மூக்கடைப்பு பிரச்சனை இருந்தால், ஒரு பௌல் சூடான சூப் மற்றும் பானங்களைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications