Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்!
ஒவ்வொரு வருஷம் நமக்கு பிறந்த நாள் வந்தாலே ஒரு வயசு கூடிடுச்சே அப்படிங்குற ஒரு பெரிய கவலை இருக்கத்தான் செய்யுது. வயசு கூடுவது ஒரு பக்கம் இருந்தாலும் பலவித நோய்கள் ஒவ்வொரு வயதிலையும் நமக்கு கூடி கொண்டே வருது. இதையெல்லாம் சரி செய்ய காலையில் 10 மாத்திரை, இரவு 10 மாத்திரை.. இப்படி மாத்திரைகளை அடுக்கி கொண்டே சாப்பிடுவோம்.

மாத்திரைகளை எண்ணற்ற அளவில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் சற்று காலத்திற்கு சரியானது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் தவிர உண்மையிலே சரி செய்யாது. இந்த வயதிலும் ஒரு சில விஷயங்கள் செய்வதால் எந்த வித பாதிப்பும் வராது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன செயல்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உணவு முறை
பலர் 30 வயதை நெருங்கும் போதே இதை செய்ய கூடாது. அதை செய்ய கூடாது. இதை சாப்பிட கூடாது, அதை சாப்பிட கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளை தனக்குள் வகைப்படுத்தி கொள்வர்.
இது போன்ற செயல்களும் ஒரு வகையில் பாதிப்பை உண்டாக்கும். கண்மூடி தனமாக கூற படுகின்ற செய்திகளை நம்பாமல் அதை ஆராய்ந்து செய்வது நல்லது.

மீன்
40 வயதை நெருங்கும் போதே அசைவ உணவுகளை மறந்து விட வேண்டும் என கூறுவார்கள். ஆனால் இது அப்படி கிடையாது. அசைவ உணவுகளில் மீன் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம். இது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையே தரும்.

வண்ணமயமான உணவுகள்
பொதுவாக கலர் கலர் உணவுகளை சாப்பிட கூடாது என்பார்கள். ஆனால், கலர் கலர் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை கொண்டு சமைத்து சாப்பிடலாம். இது உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தரும். அத்துடன் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்வை இது தர கூடும்.

காபி
40 வயதை நெருங்கினால் காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் என பலர் கூறுவார்கள். இதற்கு மாறாக பச்சை நிற காபி கொட்டைகளை கொண்டு காபி தயாரித்து குடிக்கலாம். இது உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்து கொள்ளும்.

யோகர்ட்
பால் பொருட்களை 40 வயதை கடந்தும் சாப்பிடலாம். உடலுக்கு அதிக வலுவை பெற வேண்டும் என்றால் அதற்கு பால் பொருட்களும் முக்கியம். யோகர்ட், பால் போன்றவற்றை குடிக்கலாம். இது அதிக ஆரோக்கியத்தை உடலுக்கு தரும்.

தானிய வகைகள்
பலவித தானியங்கள் இருந்தாலும் அதில் ஒரு சில தானிய வகைகள் தான் அதிக ஊட்டச்சத்துக்களை தரும். தானிய வகைகள் உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் செரிமான பிரச்சினையையும் இது உண்டாக்காது.

பருப்பு வகைகள்
உடலில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இந்த பருப்பு வகைகளுக்கும் உண்டு. பருப்பு வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும். மேலும், இதய பாதிப்புகள், சர்க்கரை நோய் போன்ற அபாயத்தையும் இது தடுக்கும்.



Click it and Unblock the Notifications











