Latest Updates
-
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாதாம்! மீறினால் இந்த ஆபத்து நிச்சயம்!
நம்மில் பலருக்கும் உணவு முறையின் அடிப்படையான சில விஷயங்கள் கூட தெரிவதில்லை. எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும், எப்படிப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, எவ்வளவு இடைவெளி விட்டு மீண்டும் உணவை சாப்பிட வேண்டும் என்கிற சில முக்கியமான விஷயங்கள் பற்றிய புரிதல் கூட நமக்கு கிடையாது. உண்மையில் இது போன்ற தவறான அணுகுமுறை தான் நமது ஆயுளுக்கே ஆபத்தை தருகிறது.

இவை உடலின் செயல்திறனை முடக்கி, ஒவ்வொரு உறுப்புகளில் மிக மோசமான அபாயத்தை உண்டாக்குமாம். நாம் தண்ணீர் குடிக்கும் முறை முதல் உணவு சாப்பிடும் பழக்கம் வரை இதன் தாக்கம் உள்ளது என உணவு மருத்துவர்கள் கூறுகின்றனர். முக்கியமாக எதை சாப்பிட்ட உடனேயும் நாம் தண்ணீர் குடிக்கும் பழக்கம் தான் பலவித பாதிப்புகளை நமக்கு தருகிறது.
இதில் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற எதிர் வினைகள் உடலில் நடக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏன் பழங்கள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது, இதனால் உண்டாகும் பாதிப்பு என்ன, எப்படி இதற்கு தீர்வை தருவது போன்ற பல தகவல்களை இங்கு காணலாம்.

உணவே மருந்து!
தற்போதைய கால கட்டத்தில் உணவானது விஷத்திற்கு நிகரான ஒன்றாக தான் மாறியுள்ளது. சாப்பிடும் உணவும், அதன் தன்மையும் மாற்றம் பெற்றுள்ளது ஒரு பக்கம் என்றால், மறு பக்கத்தில் இதை சரியான முறையில் நாம் சாப்பிடுவது கிடையாது. எதிர் வினைகளை தரும் உணவுகளோடு மற்ற உணவுகளை நமக்கு தெரியாமலே சாப்பிட்டு வருகின்றோம்.

தண்ணீர்
சாப்பிடும் போது நம்மில் பலர் செய்யும் தவறு இது தான். எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிப்பது. சாப்பிடும் போதும், சாப்பிடுவதற்கு முன்னரும், சாப்பிட்ட பின்னரும் தண்ணீரை உணவுடன் சேர்த்து குடித்து விடுவோம். ஆனால், இதனால் உண்டாகும் அபாயம் நமக்கு தெரிவதில்லை.

அபாயம்!
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அவை நேரடியாக உணவு மண்டலத்தை பாதிக்கும். இதனால் செரிமான கோளாறு, அஜீரண பிரச்சினை, வாயு தொல்லை, வயிற்று உப்பசம், போன்ற பல பிரச்சினைகளை உண்டாக்குமாம். முக்கியமாக செரிமான மண்டலத்தில் அமில தன்மையை சீரற்ற முறையில் இது வைக்குமாம்.

பழங்கள்
இந்த நிலை பழங்களுக்கும் பொருந்தும். சில குறிப்பிட்ட பழங்கள் சாப்பிடும் போது நாம் தண்ணீர் குடிக்க கூடாது என மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர். அவ்வாறு குடிக்கும் போது வயிற்று போக்கு, வயிற்றில் வலி, வாயு தொல்லை உண்டாகுமாம்.

எந்த வகை பழங்கள்
பெரும்பாலும் எல்லா வகை பழங்கள் சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் தண்ணீர் அருந்த கூடாது. குறிப்பாக சிட்ரஸ் வகை பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாச்சி, போன்றவற்றை கூறலாம். தண்ணீரின் pH அளவும் பழங்களின் pH அளவும் முற்றிலுமாக மாறுபட்டு சீரற்ற நிலையை உண்டாக்குமாம்.

நொதிகள்
நாம் சாப்பிட்ட பிறகு தான் உணவை வயிறானது நொதித்தல் செயல் முறைக்கு உட்படுத்தும். உணவை நொதிக்க வைக்க சில முக்கிய என்சைம்கள் தேவை. அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் இந்த நீரானது தடுத்து விடுமாம்.

நேரம்
எனவே எப்போது பழங்கள் சாப்பிட்டாலும் உடனே தண்ணீர் குடிக்காமல் 30 நிமிடம் சென்ற பின் நீர் அருந்தலாம். இதே முறையை உணவு சாப்பிடும் போது கடைபிடித்தல் அவசியம். இல்லையேல் மேற்சொன்ன பாதிப்புகள் நிச்சயம் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











