Just In
- 48 min ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 4 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 9 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 12 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மன அழுத்தத்திற்கும் ஆரோக்கியமற்ற வாழிவிற்கும் இருக்கும் சம்பந்தம் என்ன?
ஆரோக்கியமற்ற உணவு முறை மன அழுத்தத்திற்கு காரணம் என இந்த கட்டுரையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஏற்படும் அதிகமான மன அழுத்தம் வேலை புரிபவர்களின் உண்ணும் நடத்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவது, அதிகமான அளவு உண்ணுவது போன்றவைகள் இந்த அழுத்தத்தால் ஏற்படுகின்றன. அலுவலகத்தில் மட்டும் இல்லாமல் இந்த நிலை அவர்களின் இரவு உணவை வீட்டில் உண்ணும்போதும் தொடர்கிறது.
இதனை உறுதி செய்ய ஆராச்சியாளர்கள் 2 விதமான ஆய்வை மேற்கொண்டனர். மொத்தம் 235 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர். முதல் ஆய்வில், சீனாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப கம்பெனியிலிருந்து 125 பேர் கொண்ட குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. காலையில் மிக அதிக அளவு வேலை பளு இவர்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது ஆய்வில் , 110 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் வாடிக்கையாளர் சேவை மைய தொழிலாளர்கள் . அதிகாரத்துடன் கடுமையாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டது. இது இவர்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது.
நாள் முழுதும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இரண்டு குழுவில் உள்ளவர்களும், எதிர்மறை மன நிலையில் இரவு உணவில் ஜங்க் உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டனர். உணவின் அளவும் சராசரியை விட அதிக அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சில நேரங்களில் உணவு உண்ணும் செயல் எதிர்மறை மன நிலையை கட்டுப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெறுப்பை தொலைத்து அவர்கள் விரும்பும் மனநிலையை அடைவதற்காக சிலர் அதிகம் உண்ணுகின்றனர்.
ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது , மன அழுத்தத்தின் போது சுய கட்டுப்பாட்டின் அளவு குறைவதன் விளைவாகும். மன அழுத்தத்தால் பாதுக்கப்பட்ட ஒரு நபர், தனது அறிவாற்றல் மற்றும் நடத்தையை கட்டுப்படுத்துவதில் தவறி விடுகிறார். இதனால் சமூகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்வியை தழுவுகிறார்.
இந்த தீய விளைவுவுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவதற்கான தீர்வுகள் இருக்கிறது. இரவு நேரத்தில் ஆழமாக தூங்கும் தொழிலாளர்கள் மறுநாள் வேலையில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மன அழுத்தத்தை வெற்றிகரமாக கடக்கும்போது, ஆரோக்கியமற்ற உணவில் இருந்தும் தொழிலாளர்கள் அவர்களை காத்துக் கொள்கின்றனர்.