Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
தினமும் தக்காளி சாப்பிட்டால் இதெல்லாம் ஆகும்னு தெரியுமா?
நம் சமையலில் அதிகம் பயன்படுத்தும் தக்காளியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து.
அமெரிக்கவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தக்காளியை மெக்ஸிகோவில் தான் முதலில் உணவுக்காக பயன்படுத்தினார்கள். நம் சமையலில் அன்றாடம் இடம் பெற்றிடும் ஒரு பொருள் தக்காளி. மூன்று வேலை உணவிலும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்கிறோம்.
தக்காளி சாப்பிடுவது ஆபத்தானதல்ல ஆனால் அதிகளவில் எடுப்பது சிலருக்கு ஆபத்து கூட ஏற்படுத்தலாம். தக்காளிச் செடியின் இலைகள் சிலருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி போன்றவை ஏற்படுத்தும்.

ஆசிட் :
தக்காளியில் அதிகளவு ஆசிட் இருக்கிறது. இதனை எடுப்பதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். தக்காளியில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் இதனால் வயிற்றில் அதிகளவு கேஸ்ட்ரிக் கேஸ் உற்பத்தியாகும்.
வயிற்றில் ஆசிட் அளவு உயர்ந்தால், அது ஜீரண சக்தியை குறைத்திடும்.

அலர்ஜி :
தக்காளியை அதிகமாக எடுத்தால் சில நேரங்களில் ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்திடும். சில நேரங்களில் இருமல்,தும்மல் தொண்டை எரிச்சல் போன்றவை ஏற்படும்.

கிட்னி :
கிட்னி தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவில் பொட்டாசியம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அது தக்காளியில் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டாசியம் அதிகளவு சேர்ந்தால் அது கிட்னியின் செயல்பாடுகளை முடக்கிவிடும். தக்காளி,தக்காளி சாஸ் போன்றவற்றை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

டயேரியா :
தக்காளியினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்புகள் அதிகம். டயேரியா பாதிப்பு இருக்கும் போது உணவில் தக்காளியை சேர்க்க கூடாது. காரணம், டயேரியா ஏற்பட காரணமாக இருக்கும் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா வளர்வதற்கு, அதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு தக்காளி உறுதுணையாய் இருக்கும்.

சருமம் :
தக்காளியில் அதிகளவு லைகோபென் இருக்கிறது. இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படும்.

சிறுநீர்ப்பிரச்சனை :
ஆசிட் நிறைந்த உணவுகளான தக்காளியை எடுத்துக்கொள்வதால் அது நம் சிறுநீர்ப்பையில் தொற்றை உண்டாக்கும்.

உடல் வலி :
தக்காளியில் அல்கலாய்டு நிறைய இருக்கிறது. இது உடலில் கால்சியம் பற்றாகுறையை ஏற்படுத்தும். இதனால் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு வலி உண்டாகும்.

மைக்ரேன் :
மைக்ரேன் தலைவலியை தூண்டும் ஆற்றல் தக்காளிக்கு உண்டு. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி 40 சதவீத மைக்ரேன் வலிகளை உணவின் மூலமாகவே கட்டுப்படுத்தலாம். இதில் முக்கியம் இடம் பிடிப்பது தக்காளி.
மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள் தக்காளியை தவிர்ப்பது நன்று.



Click it and Unblock the Notifications











