Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது? எதனால் தெரியுமா?
சில உணவுகளை நாம் பச்சையாக சாப்பிட்டால் பாதிப்பை தரும். எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் பச்சையாக சாப்பிடக் கூடாது என்று இக்கட்டுரை விளக்குகிறது.
காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் சிலவகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. அவ்ற்றிலுள்ள கடினமான கார்போஹைட்ரேட் ஜீரணிக்காது. அதோடு ஜீர்ண மண்டல்த்திற்கும் பாதிப்பை தரும்.
இன்னும் சில உணவுகள் மோசமான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். அவை கடுமையான விளைவுகளை தரும். ஆகவே அவ்வாறான உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி எந்தெந்த உணவுகளை நீங்கள் சாப்பிடக் கூடாது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உருளைக் கிழங்கு :
உருளைக் கிழங்கை வேக வைத்து அல்லது வறுத்தோ சாப்பிட எனைவருக்கும் பிடிக்கும். இருந்தாலும் சிலர் பச்சையாகவே மென்று முழுங்குவார்கள்.
இதிலுள்ள ஸ்டார்ச் ஜீரணமடையாது. வாயு, உப்புசத்தை தரும். அதுபோலவே பச்சையாக இருக்கும் உருளையில் சோலானைன் என்ரு பொருள் விஷத்தன்மை கொண்டதால் அதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

முளைக்கட்டிய பயிறு :
முளைகட்டிய பயிறு வகைகளில் முளைக்கட்டும்போது ஈகோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்புள்ளது. இதனை சாப்பிடுவதால் உடல் பாதிப்பு உண்டாகும். இவற்றை குழந்தைகள், கர்ப்பிணிகல் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் சாப்பிடுதலை தவிர்க்க வேண்டும்.

சிவப்பு பீன்ஸ் :
சிவப்பு பீன்ஸை சமைக்காமல் சாப்பிடுவதால் மிகவும் மோசமாக வனதி, பேதி மற்றும் மயக்கம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. அதில் அதிகப்படியாக இருக்கும் லெக்டின் மற்றும் ஃபைடோஹீம்அளூடினின் என்ற வேதிப் பொருட்களே இதற்கு காரணம்.

தேன் :
தேன் மிகவும் நல்லதுதான். ஆனால் தேனிலுள்ள க்ரேயனோடாக்ஸின் என்ற பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும். எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதனை ஏதாவது பொருளுடன் கலந்து சாப்பிடவேண்டும். தனியாக சாப்பிடக் கூடாது.

மரவள்ளி கிழங்கு :
மரவளிக் கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதோடு அதிகமாக பெரிய மூலக்கூறு கொண்ட சத்துக்கள் மற்றும் சயனைடு இருக்கிறது. இவைகளை சமைத்து சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் சயனைடு விஷத்தன்மை கொண்டு உடலுக்கு பாதிப்பை தருகிறது.

பால் :
பாலை நிறைய பேர் பச்சையாக குடிப்பார்கள். ஆனால் அதனை நன்றாக காய்ச்சி குடிக்கவில்லையென்றால், அதிலுள்ள கிருமிகள் குடல் நோய்களை உருவாக்கிவிடும். காய்ச்சி குடிப்பதால் சத்துக்கள் வீணாகும் என்ற தவறான கருத்து உருவாகியிருக்கிறது.



Click it and Unblock the Notifications