Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
உணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா? கெட்டதா?
அன்றாட உணவு பழக்கத்தில் அதிகமாக அப்பளம் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் எதிர்மறை மாற்றங்கள் மற்றும் தீய விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
அப்பளம்!!! இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

மதிய உணவின் ருசி, அதன் மீதான விருப்பத்தை அதிகரிக்கும் அப்பளம் கூட உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கம் உண்டாகும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அமிர்தமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு எனும் போது. அப்பளம் மட்டும் எம்மாத்திரம்?

சோடியம்!
அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. அப்பளத்தை தயாரிக்கவும், ருசி சேர்க்கவும் பயன்படும் பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும்.
ஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. முக்கியமாக உப்பின் அளவு அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது. உடலில் / இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.

மசாலா பப்பட்!
இன்று ருசி மற்றும் வட இந்திய கலப்பு உணவு முறையை பின்பற்றும் போது மசாலா கலப்பு உள்ள பப்பட் எனப்படும் அப்பள உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.

மலச்சிக்கல்!
அளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை மலச்சிக்கல். அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.

எண்ணெய் பயன்பாடு!
அதே போல அப்பளம் சமைக்கும் போது என்ன எண்ணெய் பயன்படுத்துகிறோம். அந்த எண்ணெயின் தரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.தரமற்ற எண்ணெயில் அப்பளம் சமைத்து சாப்பிடுவது தீய கொலஸ்ட்ரால், இதய கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்றவை உண்டாக காரணியாகலாம்.

சுகாதாரமற்ற முறை!
மற்ற உணவு பொருட்களை போல அப்பளத்தையும் சுகாதாரமாக வைத்து சமைக்க வேண்டும். சிலர் வீடுகளில் அப்பளத்தை மட்டும் திறந்த கவரில், சமையல் அறையில் ஏதோ ஒரு இடத்தில், அடுப்படியில் கீழே படும் நிலையில் வைத்து சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications