Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
நீண்ட ஆயுள் வாழ ஆசையா? அப்படியெனில் முழு தானியங்கள் சாப்பிடுங்கள்
முழு தானியங்கள் என்பவை கோதுமை மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை குறிக்கும். அந்த காலங்களில் 100 வயது வரை வாழ்ந்த பெரியவர்கள் சொல்லும் உணவு ரகசியங்கள் இந்த முழு தானிய வகைகள்தான்.
இவற்றில் புரொட்டின், நார்சத்து, விட்டமின் பி, ஆன்டி ஆக்ஸிடென்ட், தாதுக்கள் என சகல சத்துக்களும் உள்ளன.

இந்த முழுதானியங்கள் உண்டால் இளம் வயதில் வரும் மரணங்களை தவிர்க்கலாம் என ஹார்வார்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இவற்றில் உள்ள பயோ ஆக்டிவ் மூலக்கூறுகள் உடலுக்கு நிறைய நன்மைகள் தருகின்றன. அதிக நார்சத்துக் கொண்டவை. கொழுப்பினை குறைக்கின்றன. இதயத்தை பாதுகாக்கும்.
அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் முழுதானியங்களை 70 கிராம் தொடர்ந்து உண்டவர்களில் 22 சதவீதம் எந்த நோயும் தாக்காத திறனும், 23 சதவீதத்தினருக்கு இதய நோய் ஆபத்தும் இல்லாமலும், 20 சதவீதத்தினருக்கு புற்று நோய் ஆபத்தி இல்லாமலும் இருக்கின்றனர்.
ஆதலால் குறைந்தது 50 கிராம் முழுதானியமாவது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஹார்வார்டு உடல் நலம் சார்ந்த துறை கூறியுள்ளது.
சுத்தகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, முழுதானியங்கள் கட்டாயம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
முழு தானியங்கள் உண்பதால் கல்லீரலுக்கு மிகவும் நன்மைகள் விளைகின்றது. இவை கொழுப்பு உணவுகள் மீது வரும் ஆசையை தடுக்கின்றது.
பசியை வெகு நேரம் தாக்குபிடிக்க வைக்கிறது என டெல்லியை சேர்ந்த ஆய்வாளர் அன்ஷுல் ஜெய் பாரத் கூருகின்றார்.
ஆகவே உங்கள் வீட்டில் முழுதானியங்களை பழக்கப்படுத்துங்கள் மிக முக்கியமாக குழந்தைகளுக்கு கட்டாயம் தினமும் முழு தானியங்கள் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.
ஓட்ஸ், முழுதானியங்களால் செய்யப்பட்ட சப்பாத்தி, சூப் என எல்லாவற்றிலும் சேர்த்திடுங்கள். கல்லீரலுக்கு நன்மைகள் தரும். இதயத்திற்கு பாதுகாப்பு தரும். சிறு நீரக செயல்களை துரிதபடுத்தும், மூளையை சுறுசுறுப்பாக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


