Just In
- 43 min ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 58 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 2 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
காபி அதிகமாய் குடித்தால் காது கேட்காதா?- இதபடியுங்க
காபி அதிகமாக குடிப்பது உடலுக்கு நல்லதில்லை என நீங்கள் அறிந்ததே . காபி குடிப்பதால் தலைவலி, இதய பாதிப்புகள் போன்றவை வரும் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூடுதலாக காது கேட்கும் திறனையும் இழக்கும் வாய்ப்புகள் உள்ளது என தெரியுமா?
ஒரு நாளைக்கு 200 மி.கி.- 400 மி.கி அளவு காஃபின் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பாவிலுள்ள உணவுப் பாதுகாப்பு குழு 2015 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளது.
மேலும் காபி அதிகமாக குடிப்பவர்கள் விமானம் மற்றும் இசைக் குழுவில் வேலை செய்து வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
விமான நிலையம் மற்றும், ட்ரம்ஸ் போன்ற வாத்தியங்கள் இசைக்கக் கூடிய மேற்கத்திய இசைக் குழு நடத்துவர்கள் அதிக சப்தத்தில்தான் வேலை செய்வார்கள்.
மிக அதிக இரைச்சலில் நம் காது, தன்னைத் தானே மூடி காது சவ்வினை பாதுகாத்துக் கொள்ளும். இதைதான் காது அடைக்கிறது என்று நாம் சொல்வோம். இது 72 மணி நேரம் வரை நீடித்து பின் இயல்பு நிலைக்கு காது வந்துவிடும்.
ஆனால் தொடர்ந்து இந்த மாதிரியான சப்தங்களில் பணிபுரிபவர்கள், காஃபி பிரியர்கள் என்றால், நிரந்தரமாக காது கேட்காமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சோதனைக்கு உட்படுத்தப்படும் குனியா பன்றியிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர் மேக் கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
பன்றிகளை இரு குழுவாக பிரித்து, ஒரு குழு பன்றிகளுக்கு காஃபி அளித்து, தினமும் 1 மணி நேரம் மேற்கத்திய இசையை கேட்க வைத்தார்கள். மற்றொரு குழுவிற்கு காபி அளிக்காமல் ஒரு மணி நேரம் மேற்கத்திய இசையை கேட்க வைத்தார்கள்.
8 நாட்களுக்கு பிறகு காபி குடித்த பன்றிகள் காது கேட்கும் திறனை இழந்திருந்தது. இந்த ஆய்வின் இறுதியில், மேக் கில் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்னவென்றால், அதிக இரைச்சலில் வேலை செய்பவர்கள், அதிகமாய் காபி குடித்தால், அவர்கள் கூடிய விரைவில் காது கேட்கும் திறனை இழப்பார்கள் என்று கூறியிருக்கின்றனர்.