Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
காபி அதிகமாய் குடித்தால் காது கேட்காதா?- இதபடியுங்க
காபி அதிகமாக குடிப்பது உடலுக்கு நல்லதில்லை என நீங்கள் அறிந்ததே . காபி குடிப்பதால் தலைவலி, இதய பாதிப்புகள் போன்றவை வரும் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூடுதலாக காது கேட்கும் திறனையும் இழக்கும் வாய்ப்புகள் உள்ளது என தெரியுமா?
ஒரு நாளைக்கு 200 மி.கி.- 400 மி.கி அளவு காஃபின் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பாவிலுள்ள உணவுப் பாதுகாப்பு குழு 2015 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளது.

மேலும் காபி அதிகமாக குடிப்பவர்கள் விமானம் மற்றும் இசைக் குழுவில் வேலை செய்து வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
விமான நிலையம் மற்றும், ட்ரம்ஸ் போன்ற வாத்தியங்கள் இசைக்கக் கூடிய மேற்கத்திய இசைக் குழு நடத்துவர்கள் அதிக சப்தத்தில்தான் வேலை செய்வார்கள்.
மிக அதிக இரைச்சலில் நம் காது, தன்னைத் தானே மூடி காது சவ்வினை பாதுகாத்துக் கொள்ளும். இதைதான் காது அடைக்கிறது என்று நாம் சொல்வோம். இது 72 மணி நேரம் வரை நீடித்து பின் இயல்பு நிலைக்கு காது வந்துவிடும்.
ஆனால் தொடர்ந்து இந்த மாதிரியான சப்தங்களில் பணிபுரிபவர்கள், காஃபி பிரியர்கள் என்றால், நிரந்தரமாக காது கேட்காமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சோதனைக்கு உட்படுத்தப்படும் குனியா பன்றியிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர் மேக் கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
பன்றிகளை இரு குழுவாக பிரித்து, ஒரு குழு பன்றிகளுக்கு காஃபி அளித்து, தினமும் 1 மணி நேரம் மேற்கத்திய இசையை கேட்க வைத்தார்கள். மற்றொரு குழுவிற்கு காபி அளிக்காமல் ஒரு மணி நேரம் மேற்கத்திய இசையை கேட்க வைத்தார்கள்.
8 நாட்களுக்கு பிறகு காபி குடித்த பன்றிகள் காது கேட்கும் திறனை இழந்திருந்தது. இந்த ஆய்வின் இறுதியில், மேக் கில் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்னவென்றால், அதிக இரைச்சலில் வேலை செய்பவர்கள், அதிகமாய் காபி குடித்தால், அவர்கள் கூடிய விரைவில் காது கேட்கும் திறனை இழப்பார்கள் என்று கூறியிருக்கின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


