Just In
- 6 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 46 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தினமும் ஆரஞ்சு ஜூஸை குடிக்கிறீர்களா? இந்த நன்மைகளெல்லாம் உண்டாகும்!!
ஆரஞ்சு பழ ஜூஸ் அதிக அளவு முக்கியமான மினரல்களை அளிக்கின்றன. அதோடு அவை இதய நோய்கள், ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு ஜூசை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
சிலர் குளிர் மற்றும் மழைக் காலங்களில் சிட்ரஸ் குறிப்பாக ஆர்ஞ்சு பழங்களை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துவிடும் என்று பயந்து கொள்வார்கள்.
இது முற்றிலும் தவறு. ஜலதோஷம் , நெஞ்சு சளி இருந்தால் மட்டும் அவற்றை சாப்பிடக் கூடாது. மற்றபடி இந்த பருவத்தில்தான் முக்கியமாய் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும்.
அவை சளி காய்ச்சலை உங்களை நெருங்க விடாதபடி நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி பாதுகாப்பு வளையத்தை அளிக்கும்.
இதய நோய்களை தடுக்கும் :
ஹெர்ஸ்பெரிடின் என்ற பொருள் ஆரஞ்சில் உள்ளது. அது இதயத்தில் அடைப்புகளை உண்டாக்காமல் தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கலாம்.
ரத்த கொதிப்பை தடுக்கும் :
ஆரஞ்சில் இருக்கும் அதிக மெக்னீசியம் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். சோடியம் அளவை குறைத்து அதிக ரத்த அழுத்தத்தை நார்மல் அளவிற்கு கொண்டு வரும்.
காயங்களை ஆறச் செய்யும் :
ஆரஞ்சில் இருக்கும் ஃப்ளேவினாய்டு காயங்களையும் உறுப்புகளை இருக்கும் பாதிப்புகளையும் சரி செய்யும். காயங்கள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் :
நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். விட்டமின் சி சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். வெள்ளை அணுக்கள் உற்பத்தியை பெருக்கும்.
அல்சரை குணப்படுத்தும் :
அல்சரினால் குடலில் உண்டாகும் பாதிப்பை குணப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
சிறுநீரகக் கற்களை தடுக்கும் :
தொடர்ந்து ஆர்ஞ்சு ஜூஸ் குடிக்கும்போது, சிறு நீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும். கடினமான உப்புக்களால் உருவாக்கப்படும் இந்த கற்களை ஆர்ஞ்சிலுள்ள அமிலப் பண்பு கரைத்துவிடும் ஆற்றல் கொண்டது.
புற்று நோயை தடுக்கும் :
புற்று நோய்க்கு காரணமான ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்துவிடும். முக்கியமாக குடல், நுரையீரல், வாய்ப்புற்று நோயை தடுக்கும்.
ஆரோக்கியமான சருமம் தரும் :
ஆரஞ்சில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும். இளமையான சருமத்தை பெறவும், முதுமையை தள்ளிப் போடவும் உதவும்.
உடல் எடை :
உடல் எடையை குறையச் செய்யும். அதிக நார்சத்து கொண்ட இந்த ஜூஸ் கொழுப்பை கரைக்கிறது.
ரத்த சோகை :
ரத்த சோகையை குணப்படுத்தும். ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இரும்பு சத்தை உடலில் உறிய விட்டமின் சி தேவை. இது ஆரஞ்சில் உள்ளது.