Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்!!!
உங்களுக்கு பகலில் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளதா? அலுவலகத்தில் வேலையே செய்ய முடியவில்லையா? ஓரே தூக்கம் தூக்கமாக வருகிறதா? அப்படியெனில் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிட வேண்டிய காலை உணவுகள்!!!
பொதுவாக சோம்பேறித்தனமானது பல்வேறு காரணங்களால் ஏற்படும். அதில் ஒரு குறிப்பிட்ட உணவுகள், பழக்கழக்கவழக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பிடத்தக்கவை. மேலும் சோம்பேறித்தனம் அதிகம் இருந்தால், நம் மீது நமக்கே ஒருவித வெறுப்பு ஏற்படும். எனவே இவைகளில் சரியாக கவனம் செலுத்தினால், வேலை நேரத்தில் சோம்பேறித்தனமாக இருப்பதைத் தவிர்க்கலாம்.
உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
சரி, இப்போது நமக்கு சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் உணவுகள் என்னவென்று பார்த்து, அவற்றை பகலில் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.
தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா? கட்டாயம் இத படிச்சு பாருங்க...

சாலட்
எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் சிலர் சாலட்டை உணவாக எடுத்து வருவார்கள். சாலட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது தான். ஆனால் சாலட்டை சாப்பிடுவதால், ஒரு நாளுக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றல் போதுமானதாக இல்லாமல் இருப்பதோடு, ஆற்றலின்மையால் சோம்பேறித்தனமாக இருக்கும்.

பால் பொருட்கள்
பால் பொருட்களை அதிகம் எடுத்து வந்தாலும், சோம்பேறித்தனமாக இருக்கும். இதற்கு காரணம் பால் பொருட்களில் உள்ள புரோட்டீன் செரிமானமாவதற்கு தாமதமாவது தான்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம், தசைகளை தளர்வடையச் செய்யும். அதனால் தான் இரவில் படுக்கும் முன் ஒரு வழைப்பழத்தை சாப்பிட சொல்கிறார்கள். மேலும் வாழைப்பழம் சாப்பிடுவதால் தான், தசைகள் தளர்ந்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற முடிகிறது.

வெள்ளை பிரட்
வெள்ளை பிட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பதோடு, சிறிது நேரம் கழித்து சோம்பேறித்தனமாகவும் இருக்கும்.

இறைச்சி
இறைச்சியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் தான், அசைவ உணவை நன்கு சாப்பிட்ட பின்னர் சோம்பேறியாகிவிடுவதோடு, நல்ல தூக்கமும் வருகிறது.

செர்ரி
செர்ரிப் பழங்களில் உள்ள மெலடோனின், தூக்கத்தை தூண்டுபவை. இப்பழத்தில் இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதுவே பகலில் என்றால் சோம்பேறியாக இருக்கக்கூடும்.

அமில உணவுகள்
அமில உணவுகளை அதிக அளவில் முந்தைய நாள் இரவில் உட்கொண்டால், மறுநாள் முழுவதும் சோம்பேறித்தனமாகவும், மந்தமாகவும் இருக்கக்கூடும்.

இனிப்பான உணவுகள்
சில இனிப்பான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது நன்றாக இருக்கும். ஆனால் அதை சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்குப் பின் நன்கு தூக்கம் வருவதை உணரக்கூடும்.



Click it and Unblock the Notifications