Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சளி, காய்ச்சல் விரைவாக குணமடைய உதவும் சில ருசியான உணவுகள்!!
மழை என்றாலே மக்கள் முதலில் நடுங்குவது குளிரை நினைத்து அல்ல, மழையால் ஏற்படும் சளி, காய்ச்சலை நினைத்து தான். காய்ச்சலை கூட சமாளித்துவிடலாம். ஆனால், இந்த சளி சனியை போல பிடித்தால் போகும் வரை மனிதனை வாட்டி எடுத்துவிடும். சரியாக தூங்க முடியாது, சுவாசிக்க முடியாது.
எந்த உணவையும் ருசிக்க முடியாமல் செய்துவிடும் இந்த சளியும், காய்ச்சலும். மாத்திரை, மருந்து, ஊசி இன்றி மருத்துவரை காணமலேயே இந்த சளி, காய்ச்சல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. அது தான் நமது முன்னோர்கள் காட்டி சென்ற உணவே மருந்து என்னும் வழி.

பூண்டு
பூண்டை உணவில் இரசமாக சேர்த்து சாப்பிடுவதால் சளி, கபம், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விரைவாக குணமைடைய முடியும். பூண்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு வலு சேர்க்கிறது.

மஞ்சள்
காலை மாலை என இரு வேளையிலும் பாலில் கொஞ்சம் மஞ்சள்தூள் மற்றும் மிளகுப் பொடி சேர்த்து குடித்து வந்தால், சளி, காய்ச்சல் இரண்டே நாட்களில் காணாமல் போய்விடும்.

கோழி சூப்
கோழி அல்லது ஆட்டுக்கால் சூப் வைத்து குடிப்பது சளி மற்றும் காய்ச்சலுக்கான சூப்பர் மருந்து. நெஞ்சு சளி இருப்பவர்கள் தவறாமல் குடிக்க வேண்டிய சூப் ஆட்டுக்கால் சூப்.

சர்க்கரைவள்ளி கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மிகுதியான வைட்டமின் ஏ சத்து உடலுக்கு வலு சேர்த்து, சளி, காய்ச்சல் தொல்லையில் இருந்து விரைவாக விடுபட உதவுகிறது.

வைட்டமின் டி உணவுகள்
வைட்டமின் டி சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மீன், பால் போன்ற உணவுகளில் வைட்டமின் டி சத்து மிகுதியாக உள்ளது.



Click it and Unblock the Notifications











