Latest Updates
-
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
நமது மண்ணில் விளையும் உணவுகளின் அதிசயிக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!
தொழிநுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து உடல்நலக் குறைபாடுகளும் ஏகபோகமாக வளர்கிறது. இதற்கான மருந்துகள், சிகிச்சைகள் மட்டுமின்றி ஆரோக்கிய உணவென்ற போதும் இப்போது நாம் வெளிநாட்டை தான் எட்டி பார்த்து ஓடுகிறோம். நமது மண்ணில் விளையும் உணவுகள் தான் நமது உடலுக்கு ஒத்துப்போகும் என்பது சில படித்த அறிவாளிகளுக்கு தெரிவதில்லை.
தலை முதல் கால் வரை என பிரச்சனையாக இருந்தாலும் நமது மண்ணில் விளையும் உணவுகள் தான் சரியான தீர்வளிக்கும். அயல்நாட்டில் விளைந்து, பதப்படுத்தப்பட்ட, இரசாயன கலப்பு உள்ள உணவுகள் உடலில் நச்சுக்களை தான் அதிகரிக்கும். எனவே, எது ஆரோக்கியம், எது ஆரோக்கியம் இல்லை என அறிந்து உணவருந்த வேண்டும்......

நெல்லிக்காய்
உடல் வலிமை அதிகரித்து, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள் நெல்லிக்காய்.

பசலைக்கீரை
தாய்பால் குறைவாக சுரக்கும் பெண்கள் அவர்கள் குழந்தைக்கு (அல்லது) தாய்பால் கிடைக்காத குழந்தைக்கு கொடிபசலைக் கீரை சிறந்த உணவாகும்.

செம்பருத்தி
இதய வலிமையை அதிகரிக்க செம்பருத்தி பூ ஓர் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

மூட்டு வலி
முடக்கத்தான் கீரை மற்றும் முட்டைகோஸ் போன்ற உணவுகள் மூட்டு வலியை குணமாக்க உதவுகின்றன.

கற்பூரவள்ளி
இருமல், மூக்கடைப்பு, சளி, நெஞ்சு சளி போன்ற குளிர்கால உடல்நலப் பிரச்சனைகளுக்கு கற்பூரவள்ளி (ஓமவல்லி) சிறந்த தீர்வளிக்கும் ஒன்றாகும்.

மணத்தக்காளி
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக மணத்தக்காளிகீரை சிறந்த உணவாக திகழ்கிறது.

அருகம்புல்
இரத்தத்தை சுத்தம் செய்ய, நல்ல இரத்த ஓட்டம் போன்றவைக்கு அருகம்புல் ஓர் சிறந்த மூலிகை உணவு.

பப்பாளி
மூளையின் வலிமைக்கும் சுறுசுறுப்பாக இயங்கவும் தினமும் ஓர் பப்பாளி பழம் சாப்பிடுங்கள். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக் கூடாது, இது கருச்சிதைவு ஏற்படுத்த கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

வாயுத்தொல்லை
வாயு தொல்லையிலிருந்து விடுபட சிறந்த உணவாக விளங்குகிறது வெந்தயக் கீரை.

நீரிழிவு
வில்வம், முள்ளங்கி, அரைக்கீரை போன்ற உணவுகள் நீரிழிவு நோய் குறைய உதவும். நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

செரிமானம்
அஜீரணத்தை போக்கும் திறன் புதினாவிற்கு உண்டு. மேலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்த அன்னாசி பழம் உதவுகிறது.

மாதவிலக்கு
மாதவிலக்கு கோளாறு இருக்கும் பெண்கள் ஆவாரம் பூ எடுத்துக் கொண்டால் பிரச்சனைகள் விரைவாக குணமாகும் என்று கூறப்படுகிறது.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலையை விரட்டும் திறன் கீழாநெல்லிக்கு உண்டு.

வாழைத்தண்டு
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வாழைத்தண்டு ஜூஸ், பொரியல் போன்றவை உட்கொண்டு வந்தால் விரைவாக அந்த கற்களை கரைத்துவிடலாம்.



Click it and Unblock the Notifications