Latest Updates
-
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம்
இந்த மருந்துகளை காபியுடன் சாப்பிடாதீர்கள்.. ஆபத்து..!
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு மாத்திரையை சாப்பிட்டுக் கொண்டுதான் இருகிறோம்.. அது பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி, வயதான பெரியவர்களாக இருந்தாலும் சரி, மாத்திரைகளை சாப்பிடாமல் இருப்பவர் என்ற நிலையே இல்லை..
அப்படி இருக்கையில் அந்த மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிட வேண்டும்? சரியான முறையில்தான் சாப்பிடுகிறோமா? அல்லது ஏதேனும் தவறு செய்கிறோமா? என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும்..

சிலர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் மாத்திரையுடன் காபியை குடிப்பார்கள்.. அது முற்றிலும் ஆபத்து.. சில மருந்துகளுடன் காபியை கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.. உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மருந்துகளின் செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப நாம் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும்: மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்கு தான் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்..
2. தைராய்டு மாத்திரைகள்: ஒருவருக்கு தைராய்டு இருந்தால், அவருக்கு எடை அதிகரிப்பு, தோல் வறட்சி, மூட்டு வலி, முடி உதிர்தல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை ஏற்படலாம். எனவே தைராய்டு மருந்துகளை எப்போதும் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். அதனால் உடல் அந்த மாத்திரையை நன்றாக உறிஞ்சும். எனவே இந்த மருந்தை உட்கொண்ட ஒரு மணி நேரம் கழித்துதான் காபி குடிக்க வேண்டும்.. குறிப்பாக, காபியில் உள்ள காஃபின் தைராய்டு மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும். அதனால் நீங்கள் மாத்திரை போட்டும் எந்த பயனும் இல்லை..
3. சளி மாத்திரைகள்: சளி அல்லது அலர்ஜிக்கான மருந்து மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. காபியுடன் இந்த மருந்தை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இது கவலை மற்றும் தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
4. சுகர் மாத்திரைகள்: அதுபோலவே சர்க்கரை நோய்க்கான மருந்துகளையும் காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடது. அப்படி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதேபோல், நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் காஃபின் மோசமாக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
5. அல்சைமர் : அல்சைமர் நோய் பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது. அல்சைமர் மருந்துகளை காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் காபியில் உள்ள காஃபின் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இது மருந்து மூளைக்கு செல்வதை தடுக்கிறது. அதனால் நோயாளிக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
6. ஆஸ்துமா மருந்துகள்: ஆஸ்துமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பீட்டா-அட்ரினெர்ஜிக் அகோனிஸ்டுகள் காபியுடன் சாப்பிடக்கூடாது.. அப்படி உட்கொள்ளும்போது அவற்றின் பக்க விளைவுகள் மோசமடையலாம். இந்த பக்க விளைவுகளில் பதட்டம், நடுக்கம், இதயத் துடிப்பு அல்லது அதிகரித்த இதயத் துடிப்பு ஆகியவை அடங்கும்.
7. கருத்தடை மருந்துகள்: எத்தினில் எஸ்ட்ராடியோல் மற்றும் லெவோனோர்ஜெஸ்ட்ரல், நோரெதிண்ட்ரோன் போன்ற பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகளையும் காபியுடன் சாப்பிடக்கூடாது.. இந்த தொடர்பு நடுக்கம், தலைவலி, வேகமான இதயத் துடிப்பு மற்றும் பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











