Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஐந்தில் ஒரு இந்திய இளைஞருக்கு இரத்த அழுத்தம் பாதிப்பு உண்டாவது ஏன்?
இந்தியாவில் 20 %இளைஞர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர். போதிய அளவு உடல் உழைப்பு இல்லாமல், மிதமாக வேலை செய்யும் இளைஞர்களுக்குதான் அதிக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் என்ன?
அதிக மன அழுத்தம், பதட்டம், அவசர அவசரமாக அன்றாட வேலைக்கு செல்வது என பல்வேறு விஷயங்கள் இன்றைய சூழ் நிலைகளில் காரணமாகின்றன என்று உயர் ரத்த அழுத்த சொஸைட்டியின் தலைவர் கூறுகிறார்.
வாழ்க்கை முறைகளை மாற்றுவது, புகைபிடித்தல், துரித உணவுகள், மாசு, ஆகியவைகளும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம்.
உடல் பருமனும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம் என்று கூறுகின்றார். இடுப்பு சுற்றளவு 80 செ.மி. க்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கும், 90 செ. மி க்கும் அதிகமாக இருகும் ஆண்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் உள்ளது.
அவசர கதியில் வேலைக்கு செல்வதால் போதிய உடற்பயிற்சி பெறுவதில்லை. வீட்டில் சாப்பிடாமல் பெரும்பாலோனோர் வெளியில் சாப்பிடுகிறார்கள். இதனால் சர்க்கரை வியாதி இப்போது 20- 30 வயதுள்ளவர்களை எளிதில் தாக்கிவிடுகிறது .
உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் ஏற்படவும் முக்கிய காரணம் என்று மனதில் கொள்ள வேண்டும். இதய நோயால், 1-1 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள்.
இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா அல்லது உலகளவில் இதே போன்று பிரச்சனையா என்று இதய மருத்துவரான தாஸ் என்பவரிடம் கேட்டதற்கு, எல்லா இடங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
ஆனால் மேலை நாடுகளில் தகுந்த மருத்துவ வசதி வாய்ப்புகள் இருப்பதால், குணம் பெற்றுவிட முடிகிறது. நம் நாட்டில் போதிய அளவு நவீன மருத்துவ வசதிகள் இல்லை என்று மருத்துவர் தாஸ் கூறியிருக்கிறார்.
நாம் குணம் பெறுவதை யோசிப்பதை விட தடுப்பதை பற்றிதான் யோசிக்க வேண்டும். தவறாத மருத்துவ பரிசோதனை, உப்பு மற்றும் சர்க்கரை அளவு குறைத்தல், உடற்பயிற்சி, ஆகியவை, இது போன்ற நோய்கள் வரவிடாமல் தடுக்கும் என்று மேலும் கூறியுள்ளார்.
(இந்த தகவல் IANS லிருந்து பெறப்பட்டது.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















