Just In
- 56 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஐந்தில் ஒரு இந்திய இளைஞருக்கு இரத்த அழுத்தம் பாதிப்பு உண்டாவது ஏன்?
இந்தியாவில் 20 %இளைஞர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர். போதிய அளவு உடல் உழைப்பு இல்லாமல், மிதமாக வேலை செய்யும் இளைஞர்களுக்குதான் அதிக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
இதற்கு காரணம் என்ன?
அதிக மன அழுத்தம், பதட்டம், அவசர அவசரமாக அன்றாட வேலைக்கு செல்வது என பல்வேறு விஷயங்கள் இன்றைய சூழ் நிலைகளில் காரணமாகின்றன என்று உயர் ரத்த அழுத்த சொஸைட்டியின் தலைவர் கூறுகிறார்.
வாழ்க்கை முறைகளை மாற்றுவது, புகைபிடித்தல், துரித உணவுகள், மாசு, ஆகியவைகளும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம்.
உடல் பருமனும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம் என்று கூறுகின்றார். இடுப்பு சுற்றளவு 80 செ.மி. க்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கும், 90 செ. மி க்கும் அதிகமாக இருகும் ஆண்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் உள்ளது.
அவசர கதியில் வேலைக்கு செல்வதால் போதிய உடற்பயிற்சி பெறுவதில்லை. வீட்டில் சாப்பிடாமல் பெரும்பாலோனோர் வெளியில் சாப்பிடுகிறார்கள். இதனால் சர்க்கரை வியாதி இப்போது 20- 30 வயதுள்ளவர்களை எளிதில் தாக்கிவிடுகிறது .
உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் ஏற்படவும் முக்கிய காரணம் என்று மனதில் கொள்ள வேண்டும். இதய நோயால், 1-1 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள்.
இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா அல்லது உலகளவில் இதே போன்று பிரச்சனையா என்று இதய மருத்துவரான தாஸ் என்பவரிடம் கேட்டதற்கு, எல்லா இடங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
ஆனால் மேலை நாடுகளில் தகுந்த மருத்துவ வசதி வாய்ப்புகள் இருப்பதால், குணம் பெற்றுவிட முடிகிறது. நம் நாட்டில் போதிய அளவு நவீன மருத்துவ வசதிகள் இல்லை என்று மருத்துவர் தாஸ் கூறியிருக்கிறார்.
நாம் குணம் பெறுவதை யோசிப்பதை விட தடுப்பதை பற்றிதான் யோசிக்க வேண்டும். தவறாத மருத்துவ பரிசோதனை, உப்பு மற்றும் சர்க்கரை அளவு குறைத்தல், உடற்பயிற்சி, ஆகியவை, இது போன்ற நோய்கள் வரவிடாமல் தடுக்கும் என்று மேலும் கூறியுள்ளார்.
(இந்த தகவல் IANS லிருந்து பெறப்பட்டது.)