டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?

By Maha

What to do after a heavy Meal
எப்போதாவது ஒரு நாள் மனச ரிலாக்ஸ் பண்ண வெளியே போவோம், அப்ப சுவையான உணவைப் பார்த்ததும் நம்மை அறியாமலே டயட்டை மறந்து அதிகமா சாப்பிட்டு விடுவோம். அப்படி அளவுக்கு அதிகமா சாப்பிட்டு விட்டால் நம்ம வயிறு பண்ணுற தொந்தரவ தாங்க முடியாது. அந்த நேரத்துல என்ன பண்ணுணா தொந்தரவு போகும்-னு பார்ப்போமா!!!

1. சாப்பிட்டப் பிறகு 15-20 நிமிடங்கள் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ ஓய்வு எடுக்கலாம். அவ்வாறு செய்தால் மூளையில் இருந்து செல்லும் இரத்த சிவப்பணுக்கள் உண்ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும். எஞ்சிய பொருட்கள் செரிமான மண்டலம் சென்று செரிமானம் ஆகி, வயிற்றுத் தொந்தரவை நீக்கும்.

2. உணவு உண்ட பின் நிற்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஓடுவது போன்ற கடினமான பயிற்சியை செய்யக் கூடாது, அதற்கு பதிலாக சிறிது நேரம் நடக்கலாம். நடந்தால் உடலில் செரிமானம் நன்கு நடைபெறும்.

3. அளவுக்கு அதிகமாக உண்ட பிறகு ஒரு கப் கிரீன் டீ குடித்தால் வயிற்று தொந்தரவு சரியாகும். ஏனென்றால் கிரீன் டீ செரிமானத்திற்கு மிகச் சிறந்த ஒரு மருந்தாகும்.

4. உடல் எடை குறைவதற்கு சுடு தண்ணீரும் ஒரு முக்கியமான ஒன்று. அப்படி இருக்கும் போது அதிகமாக சாப்பிட்டால், உடனே தண்ணீர் குடிக்காம, 25-30 நிமிடம் கழித்து குடிக்கலாம். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை பழச்சாற்றையும் சேர்த்து குடிக்கலாம். இதனால் வாயுத்தொல்லை தடைபட்டு, செரிமானத்தன்மையும் அதிகமாகும்.

ஆகவே டையட்-ல இருந்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டவங்க, இந்த மாதிரியெல்லாம் செய்தால் டையட்டை சரிசெய்யலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, May 23, 2012, 10:15 [IST]
Desktop Bottom Promotion