Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
ஆப்பிள் பழச்சாறு உடல் எடையை குறைக்குமாம்!!!

அதிலும் உடலில் உள்ள அதிகமான கொழுப்பை கரைக்க ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகர் மிகவும் சிறந்தது. இது உடலில் உள்ள கொழுப்பை மட்டும் கரைக்காமல், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடை செய்கிறது. மேலும் வினிகரில் இருக்கும் பெக்டின் என்னும் பொருள் உடலில் இருக்கும் கொழுப்புகளை இணைத்து, உடலில் இருந்து வெளியேற்றுகிறது. அதனால் உடனே எடை குறைவது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாததாக உள்ளது. மேலும் ஆப்பிள் பழச்சாற்றாலான வினிகரின் சுவை பிடிக்காதவர்கள், அதில் வரும் மாத்திரைகளை சாப்பிடலாம். அது கூட விரைவில் உண்ணும் உணவுகளை செரித்துவிடும்.
மேலும் ஒரு சில ஆராய்ச்சியில் ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரை சாப்பிடுவதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த மருந்து என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் இரவு சாப்பிடும் முன் இந்த சாற்றை குடிப்பதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு காலையில் அதிகரிக்காமல் இருக்கும் என்றும் ஆய்வானது கூறுகிறது. ஆகவே இது ஒரு சிறந்த இயற்கையான மருத்துவ குணமுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்து. இதனை அதிகம் குடித்தால் தொண்டையில் அரிப்பு ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளுக்கும் மிகவும் சிறந்தது. இதனை வாரத்திற்கு 4-5 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம். மேலும் அதனை ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், உடலில் உள்ள எடை குறைவதோடு, உடலானது ஆரோக்கியமாகவும், ஃபிட் ஆகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications